Friday, May 29, 2009

2008 கார்த்திகை 27 புதிய தொகுப்பு

இது கடசியுத்தத்தின் ஆரம்ப

பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன்

ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்

விளைந்துக்கொண்டேன் !

எங்கும் போக முடியாதபடி
யாரையும் பார்க்க முடியாதபடி
கட்டப்பட்டிருக்கிறது
என் காலகள்
குடும்பச்சங்கிலியால்

யாருடைய சந்தோஷமும்
யாருடைய துக்கமும்
பகிர்ந்துகொள்ளக்கூடிய
மனநிலையிலில்லை

எனது மேய்ச்சல் நிலங்கள்
முளைக்குச்சியில் அடித்த
கயிற்றின் நீளத்தில்
நிர்ணயிக்கப்பட்டுவிட்டது

விடுதலை வேட்கையோ
வெருண்டெழுவதோயில்லை

மேய்ச்சல் நிலங்களுக்குள்
விளைந்துக்கொண்டேன்
எனது பசியையும் கனவையும்

- வித்யாஷங்கர்
22/05/09

Thursday, May 28, 2009

பிரபாகரன்

இறுதித்தமிழன் இருக்கும் வரைக்கும்
இருக்கும் உன் பெயரும்
ஆய்த எழுத்தாய் !