Friday, December 31, 2010

கவிதை

மனசின் பேச்சு; வெட்டவெளிக்காற்று;

குழப்பம் தெளிய வரையும் சொற்கோலம்

குழப்பத்தில் விளைத்த சொற்கோலம்



வார்த்தை அலைகளை

வரிகளுக்குள் அடைக்கும் பிரயத்தனம்

மனதைக் கொட்டிக்காட்டும்

சொற் கண்ணாடி.

நேரில் சொல்ல முடியாததை

சொல்லும் சூட்சமம்



நுட்பம் கண்டு வியந்த

தருணத்தின் சொற் செட்டு

இப்படியுமா? அப்படியுமா?

என்பதை பகிரங்கமாக

முன்வைக்கிற ஆவணம்.



குழந்தையின் கைதட்டல்

குமரியின் நாணம்

அருவியின் தண்மை

நதியின் சிலிர்ப்பு

இலையின் பச்சையம்



சர்க்கஸோ

சாகசமோ அற்ற

சொல் விளையாட்டு

இழப்பின் சோகம்

இருப்பின் வாதை

சூழலின் மூச்சுத்திணறல்



உறவுகளின் அபத்தம்

உணர்வுகளின் கும்மி



எல்லாமான

எதுவுமற்ற

நவீன ஓவியம்



தோர்த்தவனறிவான்

தெளிவு

தேடத்தேட ஓடி ஓழியும்

கண்ணாமூச்சி

தேடாமல் தோள் தொற்றும்

பட்டாம்பூச்சி

மூச்சுப் பிடித்து

மூழ்கியவர்கள்

முத்தெடுக்கிறார்கள்.



சிலருக்கு ஜிப்பி

சிலருக்கு சோழி

எல்லோருக்கும் கிடைக்கும்

ஏதோவொன்று



..................



சங்கப்பலகை



தென்கோடி தமிழகத்தின்

அய்யர் சங்கப்பலகை

அவருக்குப்பின்

அதிகார பீடமாகி

கல்லாப் பெட்டியாய் கலகலக்கிறது



அய்யங்கார் சங்கப்பலகை

அவரோடு அழிழ்ந்தே போனது



கார்ப்பரேட் சங்கப்பலகைகள்

மார்க்கெட்டிங் யுத்திகளில்

மனச்சாட்டியை விற்று

மாட்டிக் கொண்டு முழிக்கிறது



காட்டுப் பூக்கள்

கடைக்கு வருவதில்லை

விற்பனைக்கு



நாலாம் தமிழ்ச்சங்கம் கண்ட

பாண்டித்துரைத் தேவரின்

கொடையாக

கிடைக்கிறது

அபிதான சிந்தாமணி



..................

Tuesday, December 28, 2010

முகப்புத்தகம்

எனது கணினியின் முகப்புத்தகத்தில்

யாருக்காகவோ

உருகியவளின் கடிதம்

பார்வைக்கு வைக்கப்பட்டு

கருத்து கேட்கப்படுகிறது



* நான் அவனில்லை

விதவிதமான உடையில்

வேவ்வெறு போஸ்களில்

நட்பு வேண்டுகிறார்கள்

சில பெண்கள்

தீராத காம வேட்கையோடு



* கணினி உறவு

கற்புக்கு பாதுகாப்பு



குடி கொண்டாட்டங்களை

நண்பர்கள் புடைசூழ

புகைப்படங்களாக்கி காட்டுகிறார்கள்



* அதில் நானில்லை

ஒரு எழுத்தாளனை

காமெடியனாக்கி

நாலாபுறமிருந்தும்

எழுதி நக்கல் நையாண்டி செய்கிறார்கள்



* ஊருக்குப் பெரிய கழுதை

உதுத்த கழுதை



முகப்புத்தகம்

முகங்களை மட்டுமல்ல

அவரவர்

அகங்களையும்

காட்டி விடுகிறது

வெட்ட வெளிச்சமாய்.....

Saturday, December 25, 2010

நேற்றைப் போல் இன்று....

நாளை என் இருப்பால்

நலமொன்றுமில்லை

நாட்டுக்கோ ஊருக்கோ

வீட்டுக்கோ



இன்றைக்கும் அப்படித்தான்



இருந்தாலும்

அன்றன்றைய பாடுகளை

அவரவரே பட்டு தீர்வது தானே

சரி.



இப்படித்தான் கழிந்தது

நேற்றும் இன்றும்



நாளைக்கான கனவுகளை

இழந்தவனிடம்

நாளைக்கான பணத்தை

இழந்தவனிடம்

நாளைக்கான அன்பை

இழந்தவனிடம்



இன்றைக்கானது என்று

சொல்லிக் கொள்ள

எதுவுமில்லை

நேற்றைப் போல்



வித்யாஷங்கர்

Thursday, December 23, 2010

பெயர் தெரியா பூ பூத்தது

என் மேஜையில்

திடீரென முளைத்த

செடியில்

பெயர் தெரியா பூ பூத்தது



எனது தாடியில்

படிந்தது பச்சையம்



திடிர்ச் செடிக்கு

ஒரு பெயரும்

பூவுக்கு ஒரு பெயரும்

யாரேனும் சொல்லுங்கள்

........



நதியொன்று

சாலையைக் கடக்க முயன்று

தோற்று பின் வாங்கியது



பூனை நதியைக் குடித்து

சாலையைத் தின்று

பறந்தது வானில்

சிறகில்லாமலே

........



தோட்டக்கள் நிறைக்கப்பட்ட

துப்பாக்கி முன்

ஏராளமான பிணங்கள்

சிலவற்றின் கையில்

தோட்டாக்கள் நிறைந்த

துப்பாக்கியும் இருந்தன

........



உன் பெயர் சொல்லி

அழைத்தேன்

நீ திரும்பி பார்க்கவில்லை

யாரோ திரும்பி பார்க்க

எனக்கு வேறுதிசை நோக்குவது தவிர

வழியில்லை

........



அந்த ஆடு பூவைத்தின்று

புழுக்கை போட்டது

பூக்களாய்



பூக்களின் வாசணையில்

பித்தான ஆடு

தலை தெறிக்க ஒடியது

காடு விடுத்து

........



அவளின் கை ரேகை

விரல்கள் தாண்டி வளர்ந்தது



இப்போதெல்லாம்

ரேகை

இன்னொரு விரலாக

மாறிவிட்டது அவளுக்கு

........



பேருந்தில்

பியானோவை வசித்தவன்

ஒட்டுநரில்லாமலே

வாகனத்தை

விரும்பியதிசைக்கு

செலுத்துகிறான்

எந்த விபத்தும் நேராமல்

........



அவன்

இவன் ஆனான்



இவன்

இவன் அவன் ஆனான்



எவன்

எவன் ஆனான்



யாருக்கும்

தெரியா பெருங் குழப்பம்

........





டைந்து

கிடக்

கிறது

நாற்

காலி



எப்போதோ

யாரோ

அமர்ந்தது

Wednesday, December 22, 2010

கோவில்பட்டி குறிப்புகள்

முதலாம் வகுப்பு

கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டையொட்டி அடுத்திருந்தது கோபாலகிருஷ்ணா ஆரம்பப் பாடசாலை. ஒண்ணாம் வகுப்பு டீச்சர் சீதாலஷ்மி பாட்டி. அம்மாவுக்கு ஒருமுறையில் சித்தி. பள்ளிக்கு எதிரே எங்கள் வீடு. இடையில் ரோடு.

கொளுகொளுவென்று எளிதில் தூக்கி சுமக்க முடியாதவனாக நானிருப்பேனாம். அதனாலேயே செல்லமாக பாலய்யா (டி.எஸ்.பாலய்யா) அக்காக்கள் அழைப்பார்கள். பிடறி தாண்டி முதுகுவரை நீண்டு வளர்ந்த முடி. காலில் கொலுசு.

வீட்டின் பின்புறம் பூத்துக் குலுங்கும் கனகாம்பரச் செடியிலிருந்து பூப்பறித்து பள்ளிக்கு மேல் சட்டையில் முடிந்து எடுத்துப் போவேன். டீச்சர் பாட்டி தலையில் கிருஷ்ணர் கொண்டை போட்டு கட்டிய பூவை தலையில் வைத்து, சொம்பு ஒன்றை கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பிவைப்பார். அம்மா புளிபோட்டு தேய்த்துக் கழுவி யாணைக்கிணறு தண்ணீர் நிரப்பி என்னிடம் கொடுத்தனுப்புவார். (இப்போது யாணைக்கிணறு தூர்ந்து போய் பாழுங்கிணறாக முள் மண்டி ஏ.கே.எஸ் தியேட்டர் பின்புறம் உள்ளது).

டீச்சரிடம் தண்ணீர் செம்பைக் கொடுத்ததும் அவர் மடியிலேயே தூங்கி விடுவேனாம். அப்புறம் மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்தால் மறுநாள் தான் ஸ்கூல்.

ராஜபாளையத்திலிருந்து பெரியம்மாவோ, ஏழாயிரம் பண்ணைகளிலிருந்து பாட்டி, தாத்தா, சித்தி இப்படி யார் வந்தாலும் ரோட்டை கடந்து வீட்டுக்குள் நுழையும் முன்பே வகுப்பிலிருந்து பார்த்தாலே தெரியும். அப்படியாரேனும் வந்துவிட்டால் டீச்சரிடம் சொல்லிவிட்டு வீடு கிளம்பிபோவேனாம். இதுதான் ஒண்ணாம் வகுப்பு படிப்பு.

கிருஷ்ணர் கொண்டையோடு என்னை மடியில் வைத்து பஸ் ஏஜண்ட் ராசாண்ணன் ஸ்டுடியோவில் போட்டோ எடுத்திருக்கிறார். போட்டோ எடுக்கும்போது நான் தூங்கியிருக்கிறேன்.

பிரிண்ட் போட்டபோது இறந்துபோன என்னை அவர் மடியில் வைத்திருப்பதுபோல வந்துவிட்டது.

அவ்வளவுதான் ராசாண்ணனுக்கு கோபமான கோபம். போட்டோவை கிழித்தெறிந்து ஸ்டுடியோவை உடைத்தெறிந்து விடுவேன் என்று ஒரே களேபரம்.

அப்புறம், ஸ்டுடியோக்காரர் காசுவாங்காமல் மறுபடியும் என்னை அழைத்து வரச் செய்து அவர் மடியில் உட்காரவைத்து படம் எடுத்து பிரிண்ட் போட்டுக் கொடுத்தாராம்.

நான் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் ஸ்டுடியோக்காரர் இந்த தகவலைச் சொன்னார்.

தினமும் இன்டர்வெல் விட்டதும் எல்லோரும் வேப்பம் பூவை சேகரிப்போம். அஞ்சாங்கிளாஸ் வாத்தியாரும் ஹெட்மாஸ்டருமான கோபாலகிருணய்யர் அதை ஒரு துணிப்பையில் எடுத்துப் போய் வேப்பம்பூ ரசம் செய்து குடிப்பாராம் டீச்சர் சொன்னார்.

அண்ணன், சின்னக்கா, நான், தங்கை எல்லோருக்கும் இங்குதான் ஆரம்பக்கல்வி. இப்போது அது வளவு வீடாகிவிட்டது. அப்போது தினத்தந்தியில் கன்னித்தீவு படிக்க இருந்த மன்னன் டீஸ்டாலும் இப்போது இல்லை. ராசாண்ணனும் இல்லை.

Saturday, December 18, 2010

வேறொரு நாடகம்

கூச்சல்களால் நிரம்பி வழியும்

மது விடுதிகள்

இப்போது கூடுதலாக கிடைத்த

சலூனைப் போன்ற

ஆண்களுக்கான சுதந்திரவெளி



நீங்கள் நினைப்பது போல

இங்கு சந்தோஷம் மட்டுமே

நிரம்பி வழியவில்லை

விம்மல்களும்

தோல்விகளின் புலம்பல்களும்

சிதறியே கிடக்கிறது



புத்தனுக்கு எதிரான

ஆசைகளின் வேர்கள்

இங்கு மதுவார்த்து

வளர்க்கப்படுகின்றன

கூடவே வன்மங்களும்



கவிழ்ந்துபோன

கதாநாயகர்கள் காமெடியன்களாகி

கலாய்க்கிறார்கள்



இது ஒப்பனை கலைந்த

வேறொரு ஒப்பனை

வேறொரு நாடகம்

கடல் கன்னி அழைப்பு

கடலுக்குள் வா வா என்றழைக்கிறாள். கடலை விட்டு தொலைதூரமிருந்தாலும் தேடிவருகிறாள். வா முத்துக்கள் பவளப்பாறைகள் கடல்குதிரைகள் இன்னும் இன்னுமென்று ஏராளமாக உன் காலடிபடக் காத்துக்கிடக்கின்றன வா. சூரிய ஒளியே அறியாது கடலின் அடியாழத்தில் விளைந்த தானியக்குமரி காத்திருக்கிறாள் வா. விளைந்த சங்குகளில் தன் நாதத்தை மூல மந்திரமாக்கி ஒடுங்கி ஒரு சங்கில் உயிர் வாழும் சித்தன் உனக்கென ஒரு மந்திரத்தோடு காத்திருக்கிறான் வா.

அகல்யை அள்ளிய நீரில் காமுறச்செய்த இந்திர விந்து அடைக்கப்பட்ட சங்குள் கருவாய் வளர்கிறது. வந்தெடுத்து கப்பாற்று. வராக அவதாரத்தின் போது உண்டாக்கிய பாதாள லோகம் பார்க்கலாம் வா.

ஆழிப் பேரலையில் அள்ளிச் சென்ற மழலைகள் அங்கே குதூகலத்தி கொண்டாடுகின்றன வா. பூரண சந்திரனின் பௌர்ணமியை கபளீகரம் செய்த வெண் சங்கு விளிக்கிறது வா. கரையிலிருந்து அள்ளிச் சென்ற காதல் கதைகளின் பெருந்திரள் ஏடு பத்திரமாக இருக்கிறது வா. கற்பக விருஷ்ம் கைவிரித்து காத்திருக்கிறது வா. வந்து தழுவி ஐஸ்வர்யம் பெறு. சூட்சம சரீரியாகி உன் தழுவலுக்காக யுகாந்திரமாய் காத்திருக்கிறாள் வா. ஏ! கசனே உயிர் மீட்கும் மந்திரமறிந்த நித்ய பிரம்மச்சாரியே வா. உன் தேவகச்சயாணி திகைப்பூட்டும் பாடல்களையும் நனையும், நாட்டியங்களையும் கற்றுத் தேர்ந்து காத்திருக்கின்றாள் வா.

கால காலமாய் உன் காலடியைத் தொட்டு கொஞ்சி கூவி, அலறி கூப்பாடுபோட்டு அழைத்துச் கொண்டேயிருக்கிறாள் வா. ஒவ்வொரு அலையின் அழைப்பையும் நீ உதாசீனம் செய்தாலும் இரவு பகல் மழை வெயில் பாராமல் அலைஅலையாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது அழைப்புகள்.

எவனும் அறியாத ரகசியங்களோடும் வனப்போடும் திமிரோடும் ஓயாத பெருந்துயரோடும் தீரா மோகத்தோடும் காத்திருக்கிறாள். நொடிக்கு நொடி அழைப்பு விடுத்து ஓயாத அலைகளோடு காத்திருக்கிறாள் வா.

எத்தனை உடல்கள் நனைந்தாலும். எத்தனை தூரம் கடந்தாலும், எத்தனை வயல்களில் ஒடினாலும் எத்தனை கைகள் அள்ளினாலும் எத்தனை கால்கள் மிதித்தாலும், கால தூரம் கடந்தும் குளிர்ச்சியை தனக்குள் ஒளிந்து வைத்திருக்கிறது ஆற்றுமணல் புதையலாய். தட்ப வெப்ப நிலையில் தன் சுயமிழக்காமல் காலங்காலமாய்.

அருவியின் தலைமகள். தனித்து ஒடிக் கொண்டே யிருக்கிறாள் பகவதியருளாய். பாவம் தீர்க்க பாண்டியன் வருவானென்று. கூடி நின்று கூட்டமாய் கவனம் கொள்கின்ற தாவரக்கூட்டம் மலையாள மண்ணில் திரண்ட மேகம் பொதிகையில் இறங்கி பொங்கி பொழிகிறது அருவியாய். யார் கண்ணிலும் படாத அரிய மூலிகைகளின் தலைதடவி வழிகிறது கவிதலையருவி. மாமரத்தில் சூட்சம சரீரியாகி அமர்ந்து சிரிக்கிறாள். பகவதி, சேரன் குடத்தில் இட்ட உயிர் மீட்க வருவோனை எதிர்நோக்கி.

Friday, December 17, 2010

இது கவிதையல்ல

மழைக்கு

குடை

வெயிலுக்கு

குடை

மற்றநாளில்

குடைக்கு?



.......



தொலைக்காட்சி

பெண் வர்ணனையாளரை

நிர்வாணப்படுத்தி

சுட்டது

இலங்கைராணுவம்

ஏன்

நிர்வாணப்படுத்தி....

பாவம்

இசைப்பிரியா

உன்மகள் போல

தங்கை போல

படவில்லையா?

அவளின்

கடைசி முணகல்

தமிழ்

இந்தக் காட்சியை

கனிமொழி பார்த்திருப்பாரா?

ஜெகத் கஸ்பர்? திருமாவளவன்?



.......



சீமானுக்கும்

ராசாவுக்கும்

ஒரே வயசு இருக்கும்

கோடிகளை

குவித்ததால்

ராசா உறவு

சீமான் எதிரி



.......



வாலி

வைரமுத்து

பா.விஜய்

இவங்களுக்கெல்லாம்

இலங்கைன்னு ஒரு நாட்ல

தமிழர்கள் இருந்தாங்கன்னு

தெரியுமா?

யார் சாகடிச்சது தெரியுமா?



கொலைகாரனை விட

கொடியவன்

அதை பார்த்தும்

வாய் பொத்தி இருப்பவன்



பாரதி சொன்னான்

படிச்சவன்

பாவம் செய்தால்

ஜயோன்னு போவான்



இவர்களிடம்

தயாராக

இருக்கிறதாம்

அவருக்கான

அஞ்சலிக் கவிதை



.......



இறுதித் தமிழன் இருக்கும் வரைக்கும்

இருக்கும் உன் பெயரும்

ஆயுத எழுத்தாய்

(இது யாருக்கு

பொருந்தும்)



.......



புத்தக வெளியீடுகளும்

விசிலடிக்கும்

ரசிகர்களும்

வேறொரு காமெடி



.......



பயமாயிருக்கிறது

நொண்டி நாயென்று

பின்னொருநாள்

திட்டுவாங்கப் போகிறவரை

நினைத்தால்



வித்யாஷங்கர்



.......

Thursday, December 16, 2010

விசாரணை

சைக்கிளில்

விளக்கு எரியவிடாமல்

போனவனை

போலீஸ் மடக்கி விசாரித்து

பீடி வாங்கிக் கொண்டு

விட்டது



கஞ்சா கடத்தியவனை

மிரட்டி

காசு வாங்கிச் சென்றது



மாமூல் ரவுடியை

மடக்கி

மாமூல் பெற்றது



கோடி கோடியாய்

ஊழல் செய்தவனை

கும்பிட்டு நின்றது



சிரித்துக் கொண்டே

புகைப்படக்காரர்களோடு

போலீசோடு

போஸ் கொடுக்கிறார்கள்

கோடிக் கொளையர்கள்

வார்த்தைகள்

எனது வார்த்தைகள்

சுவாசம் போல தன்னியல்பாய் உள்உருவாகி

வெளிவருகின்றன



எதை எப்படி என்

சொல்வதென்ற தீர்மானத்தை மீறி

நடைபோடுகின்றன



யார் யார் வார்த்தைகளோ

மனதில் விழுந்து

உருமாறி

தனக்கென உருவெடுத்து

தாளகதியமைத்து

நடனமிடுகின்றன



மேடைக்கு சொந்தமில்லா

கால்கள்

விட்டுச் செல்லும்

எஞ்சிய இசையையும்

தாளலயத்தையும்



பார்வையற்ற

பார்வையாளன் ரசிக்க

Wednesday, December 15, 2010

parakeets of Stone Chamber

Vidyashankar Poems

Translated by
k. rajeshwar

Poems for me
Write, You may

Never can you
Ever write
My poems.

* * *

Truth
Unable to speak

Truth
Unable to write

Unable to live
Truthfully

Writers
Are there umpteen
To titillate
To rob time

Few are there
To tell lived agonies
One among
Is me.

* * *

USE, IT HAS

My Poems
Can it not be used
For something

To raise the collar
With stylized
English speaking folks
As Son of Soil



To fanciful film guys
Show and fuss about
As man of depth

To rip stupidity
Amidst silly jokes
At booze parties
By reciting poem

To make
Academy guys wonder
‘Is it? In Tamil?’
And smear Modernism

Can it not be used
For something
Like these

Writing still
Believing them as
Poems

* * *  



Words
That you understand
Meant for Poems
Time
Has claimed them away

What is left
Is Words’ being
And its pain.

* * *





CALLING ZONE

I am incapable of
Going anywhere


Never taken efforts to
Meet anybody
Never known a place
Except mine

Important to go
See and know
Places there
In calling zone
Always


CONTINUING RELATIONSHIPS

Yet another quarter
Certainly you’ll need
Get a friend to buy
Before shop closes

No good omens
For life tomorrow
Seen

Till last gulp
Of drink
Of Kuzhathu Puzhaiyaru
Of Kumari sunrise
Of Thamirabarani
Of Philomi
Who went past forever
Beyond temple tower

Shriveled is everything
Nothing to
Tie together

Peanut mixture
Too, a good combination
Like pickles and
Fried fish

Incomplete drunkenness
Reminds waiting wife at home
Smiling son in awakened sleep

 And all others

Fully, totally and completely
Gulp the moon within 
For Oceans’ upheaval

Like wind
To dissolve without trace
One more quarter
I need

A friend
To search and fetch
To give money and get
Indeed I need him

However, never can
Kinship broken totally
Oh! Fool

Have you ever
Hugged and picked up
Street dog
Fed him milk
Tied ribbon on neck
And named him Bobby?

Have you ever
Got food and
Put an orphan kid
To sleep
In mid-night

Have you ever
Trembled
Seeing stars falling
At your feet

Have you ever
Shed tears
Unable to bear
Quiver in the voice of
The Girl
You’re talking to



These things do happen
But, Rare

Makes being
A Living one
The Life.



When The Stone Sleeps

VIKRAMADITYAN POEMS

  
Mother
A humble soul



She never knew Devaram
Thiruvasagam
Thirupugazh
Songs of Thayumanaswamy

Not even
Abhirami andhadhi
And Kandasashti Kavasam

She would tell
Tales of Karuppasmi
Marching for hunt

She worshiped
Hallowed Lamp
Unfailing

All she knew
Is to cook
Tasty food and serve

To keep
Home tidy

 Unhesitating
To slog day long

To face hardships
Un-panicked

Never let
Tender heart
Go dry

She lived
With fortitude
 And
Pride

She did anything -
In total involvement
Discipline, elegance
And wholeness
Bequeathed from
Her, we perhaps

Worries and meanness
She never knew

Like Mahishasuramardhini
She was

Lived with dignity
And self esteem
You should
Or else
Choose to die

Is it not
Fine to live
Life as she professed

Mom
Never expected
For anything
From any body


Never she
Sets her foot
At any doorstep
Who disrespects

Never hated
Anyone, had
No dreams
Or Ideals

Never disappointed
for anything

Not sad nor
Angry
Never wanting anything
Never spoke ill

Do you know
A thing

Mom
Never knew to write or
Read

Five letters
That dad taught
She would scribble
Like scrawled letters of destiny

Mother
She lived like
A Wonder

* * *

Na. Azhagiasundaram Pillai

Never
Can one be hated or loved
So deeply

Hated him
As much
I loved

More affectionate
Than I
Despised him

Till last moment
Unprepared
To forgive him

Spouted words
Like burning coal

It’s all over
Here I’m
As your remains

Many a people
Would have been needed
To put him down

Who had courage
To face off
That many

Had that incisive mind
That’d win
Any gamble

A persona
...