Monday, April 29, 2013


நேற்று உதித்தவள்

என்னோடு எப்போதும்

தோள் உரச  நடந்தவள்
எனக்குள்
இதயத்துடிப்பாய்  இயங்கியவள்

எங்கே தொலைத்தீர்
பெரும் பாவம் செய்தீர்
அஜ்யன் குற்றச்சாட்டு

அவள் சிறுமி,பேரிளம்பெண்
சிநேகிதி ,தாயுமானவள்
விட்டு விலகி
வேடிக்கை  காட்டுகிறாள்

தேடி தவிக்கிறேனா
மறக்காமல்  இருக்கிறேனா

மயக்கத்தில் கிடக்கிறேனா
மரணித்து விட்டேனா

அச்தமித்ததுபோல காட்டி
உதித்து விட்டாள்
நேற்று

இனி அவளை
தவற விட மாட்டேன்
எப்போதும்
           வித்யாஷங்கர்
              அஜயன் பாலாவுக்கு