Saturday, October 30, 2010

சும்மா இரு; சுகம் அறி!

சும்மா இருப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதை தானே உணர்ந்ததால் தான் தாயுமான சுவாமிகள் ‘சும்மா இருக்கும் சுகமறியனே’ என்றார்.
அது எவ்வளவு முடியாததொன்று என்பதை தாயுமானவரே பாடியிருக்கிறார்.
கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
(மதங் கொண்ட யானையை வசப்படுத்தி நடக்க
விடலாம்)
கரடிவெம் புலிவா யையும்
கட்டலாம் ஒருசிங்க முதுகின் மேற்கொள்ளலாம்
(கரடி புலிகளின் வாயைக்கட்டி, சிங்கத்தின்    
முதுகிலேறி சவாரி செய்யலாம்)
கட்செவி யெடுத்தாட் டலாம்
(காதை தனியே எடுத்து ஆட்டலாம்)
வெந்தழலி னிரதம்வைத்து ஐந்து லோகத்தையும்    
வேதித்து விற்றுண் ணலாம்
(யாகம் வளர்த்து மந்திரம் சொல்லி
ஐந்து லோகத்தையும் கையில் கொண்டு
விற்று சாப்பிடலாம்)
வேறொருவர் காணாமல் உலகத்து உலவலாம்
(யார் கண்ணிலும் படாமல் உலகத்தில்
நடமாடலாம்)
விண்ணவரை ஏவல் கொளலாம்
(வானிலுள்ள தேவர்களுக்கு கட்டளையிட்டு
வேலை வாங்கலாம்)
சந்ததமும் இளமையொடிருக்கலாம்
(எந்த வயதிலும் இளமை பொருந்திய
உடலோடிருக்கலாம்)
சலம் மேல் நடக்கலாம் கனல்மே லிருக்கலாம்
(நீரின் மீது நடக்கலாம் நெருப்பின்மீது இருக்கலாம்)
சிந்தையை அடக்கியே சும்மா விருக்கின்ற    
திறமரிது.
(எண்ணங்கள் எழாமல் அடக்கி
சும்மா இருக்கக்கூடிய திறன் என்பது
அரிதானது, எளிதானதல்ல,)
இவ்வளவு கடினமான, எளிதில்
அடைய முடியாத கடுந்தவங்களுக்
கெல்லாம் மேலானதான
சிந்தையை அடக்கி
சும்மா இருக்கும் திறனை
சும்மா நீ அவரருகே அமர்ந்தாலே
அடைய முடிகிறதென்றால்
அவர் சும்மாவா?
எவ்வளவு வலிமை வாய்ந்த
சும்மா இருக்கும் வாய்ப்பை
உனக்கு சுலபமாக அடையத் தருகிறாரே
அவர் அதுவல்லாமல் எது?
......................

இனிப்புக் கடையில் சிக்கிக் கொண்ட
எறும்பு இனிப்பு சாப்பிடமாட்டேன்
என்று பிடிவாதம் பிடிப்பது போலத்தான்
சும்மா இருப்பது.

விளையாட்டு மைதானத்திற்கு
குழந்தையை கூட்டிப்போய் விட்டு
எதுவும் விளையாடாதே சும்மா இரு
என்பது போலத்தான்.

எனது நண்பர் ராபின் மறைந்த
வலம்புரிஜான் சொன்னதாக கேலியாக
ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வார்.
அதன் ஆழமான அர்த்தம்
பாபாவை சந்தித்த பிறகே புரிகிறது.

வலம் புரிஜானை பார்க்க
ஒரு நண்பர் வந்திருக்கிறார், அவருடன்
ஒரு இளைஞர்
பரஸ்பர விசாரிப்புக்குப்பின்
வலம்புரிஜான் நண்பரிடம்,
தம்பி யாரு, என்ன செய்கிறார்
என்று கேட்க
நண்பர் தம்பியின் பேரைச் சொல்லி
சும்மாதான் இருக்கிறார் என்று
சொல்ல
வலம்புரிஜான், ‘அது ரொம்ப
கஷ்டமான வேலையாச்சே’
என்று சொல்லியிருக்கிறார்.
சும்மா இருப்பது  என்பது கேலிக் குறியதல்ல.
எவ்வளவு கஷ்டமானது
என்பதைத்தான் தாயுமானவ சுவாமிகள்
கூறியுள்ளார்.

பரஞ்ஜோதி பாபா
அப்படியெல்லாம் சொல்வதில்லை
ஆனால் அவர் அருகேயமர்ந்தால்
சும்மா இருக்கும் சுகமறியலாம்
‘அந்த சும்மா இருத்தல்’
பணத்தால் பதவியால் லௌகீக
எந்த அளவிடலிலும் அடங்காத
பெருஞ்செல்வம்.
வேண்டுதல்
வேண்டாமை இல்லாத
சும்மா இருத்தல்.
..........

Friday, October 29, 2010

பிஸ்கெட் பாபா (திருத்தப்பட்டது)

“இருப்பதற்காக
என்று தான்
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்”
இது கவிஞர் நகுலனின்
கவிதை வரிகள்
இப்படி இல்லாமல் போகச் செய்வதையே வடபழனியில் உள்ள பரஞ்ஜோதி பாபா! செய்கிறார்.
வெளுத்த சிகையும், ஜடா முடியும் தாடியுமான பாபாவிடம் வருபவர்கள் எல்லாம் அவருக்கு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வந்து தருகிறார்கள்.
அவரும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளையே பிரசாதமாக வழங்குகிறார். ஆக, அவர் பிஸ்கெட் பாபாவாகத் திகழ்கிறார்.
பிஸ்கெட் பாக்கெட்டுகளின் மீது அவருக்குள்ள ஈடுபாடு குழந்தைகளையும் மிஞ்சக்கூடியது. தனக்கு இடப்புறம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை சீட்டுக்கட்டை கலைப்பதுபோல மாறி மாறி அடுக்குகிறார். வரிசையை முன் நகர்த்துகிறார். கொஞ்ச நேரத்தில் பிஸ்கெட் பாக்கெட் வரிசையை பின்நகர்த்துகிறார். பச்சைக் கலர் பாக்கெட்டுகளை மேலாகவும் நீலநிற பாக்கெட்டுகளை கீழாகவும் இரண்டு வரிசையாக அடுக்குகிறார். பின் அதையே மாற்றி நீலக்கலர் பாக்கெட்டுகளை மேலாகவும் பச்சைக் கலர் பாக்கெட்டுகளை கீழாகவும் மாற்றி அடுக்குகிறார். பின் வரிசையை தன்பக்கம் நகர்த்துகிறார். சற்றுநேரங்கழித்து அதை சற்று தள்ளி நகர்த்துகிறார்.
ஒருவர் பையை பாபா காலில் வைத்து வணங்குகிறார்.
பாபா பையை வீட்டுக்குவந்த விருந்தாளிகளின் பையை குழந்தைகள் ஆவலோடு பார்ப்பது போல திறந்து பார்க்கிறார்.
வந்தவரிடம் அதை எடுத்து தரும்படி கேட்கிறார்.
பிஸ்கெட் பாக்கெட், பேரிச்சம் பழம் இப்படி ஒவ்வொன்றாக பாக்கெட் பாக்கெட்டாக எடுத்துக் கொடுக்க அதைவாங்கி தனக்கு இடப்புறத்தில் அங்கும் இங்குமாக மாற்றி மாற்றி வைக்கிறார். எது அதற்குரிய இடம் என்பதில் தீவிர முனைப்போடு செயல்பட்டு அவற்றை வைக்கிறார்.
பாபாவின் இடப்புறம் பிஸ்கெட், மேஜையில் பிஸ்கெட், வாசலில் தட்டில் உடைத்து போடப்பட்ட பிஸ்கெட், அவரது படத்தின் கீழ் பிஸ்கெட், யாரோ அளித்த பெட்டி நிறைய பிஸ்கெட், பக்தர்கள் ஒவ்வொருவர் கையிலும் பிஸ்கெட் பாக்கெட். எலிவொன்றின் கீச், கீச் சத்தம் அறையில் தொடர்ந்து கேட்கும் அதேபோல பூனை ஒன்று சுதந்திரமாக அறையின் நாலா பக்கமும் திரியும், ஆட்கள் மத்தியில்.
ஆனால் ஒரு நாளும் பாபா ஒரேயொரு பிஸ்கெட்டைக் கூட சாப்பிட்டுப் பார்த்ததில்லை. ஒரு பிளாஸ்டிக் தட்டில் உடைத்துபோடப்பட்ட பிஸ்கெட்கள் பால் ஊற்றப்பட்டு எலிக்கோ, பூனைக்கோ எப்போதும் தயராகயிருக்கும்.  அவரை பார்க்க வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு பிஸ்கெட் பாக்கெட் தருவார். திரும்ப வாங்கி அதை மற்றவர்க்கு தருவார். மற்றவரிடம் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டை வேறொருவருக்கு தருவார். சிலரிடம் வாங்கியதை தராமல் தன்னருகே வைத்துக் கொள்வார். சிலருக்கு வெறும் கையை மட்டும் காட்டி பிஸ்கெட் தராமலே போகச் சொல்கிறார்.
பாபாவை பார்த்ததும் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போன்ற மெல்லிய அதிர்வு பரவுகிறது. எட்டடி குச்சில் அவரருகே தரையமர்ந்ததும் முதுகுக் தண்டில் ஒரு சிலிர்ப்பும் இரு புருவ மத்தியில் ஒளி அல்லது இருள் கவிழ்கிறது. அடுத்த சில நொடிகளில் காணாமல் போகிறோம்.
பசி, துக்கம், தூக்கம், ஆசை, கவலை, கர்வம், பொறுப்பு, காலம், இடம்  இப்படி எல்லாமற்றவனாகி விடுகிறோம்.
காலி செய்து விடுகிறார்.
பாபா தனக்குத் தானே பேசிக் கொள்வதைத் தவிர ‘இரு’, ‘குடு’, ‘போ’ என்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பிறரிடம் பேசுகிறார். எப்போதும் அவரைச் சுற்றிலும் அந்த சிறிய அறைக்குள் குறைந்தது இரண்டு மூன்று பேராவது கண் மூடி தியானத்திலிருப்பதை பார்க்கலாம்.
கர்மயோகம், ராஜயோகம், குண்டலினி பயிற்சி என்று பல்வேறு விதமான பெயர்களில் பெரிய பெரிய விளம்பரத்தோடு பன்னாட்டு நிதியோடு பக்தர்கள் புடை சூழ பிரமாண்டமான ஆஸ்ரமங்களில் மைக்கும், இசையுமாய் வழி காட்டுவதாகச் சொல்லப்படும் கார்ப்பரேட் சாமியார்கள் மத்தியில்
வடபழனி பரஞ்ஜோதி பாபா அருகே அமர்ந்ததுமே  உன்னை காலியாக்குகிறார்.
உனக்கு எதுவும் போதிக்காமல்,
உனக்கு எதுவும் சொல்லாமல்,
உனக்கு எதையும் பயிற்றுவிக்காமல்,
காலியாக்குகிறார். அவரருகே அமர்ந்த நிமிடங்களில் காணாமல் போய் ஓரிரு மணி நேரங்கழித்து எழுப்பிவிடப்பட்ட அனுபவம் எனக்கு நேர்ந்திருக்கிறது. அதுவும் கூட இருந்தவர்கள் சொல்லித்தான் மணிக்கணக்காக அமர்ந்திருப்பதே தெரியும். என்னளவில் அது நொடிப்பொழுதாகவேபட்டது. கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டவனின் உடம்பிலிருந்து வியர்வை பொங்கிப்பெருகி வெளியேறுமே
அதேபோல என்னை என்னிலிருந்து வெளிக்கடத்தியதை காலியானதை வெறுமையானதை உணர்ந்திருக்கிறேன்.
அன்றாட செக்கு மாட்டு வேலைகளிலிருந்து விலகி சும்மா இருக்கச்செய்கிறார். சும்மா இருக்கும் சுகமறியேனே என்று நொந்து போனவர்களை சும்மாயிருக்கும் சுகமறிய செய்கிறார். அவர் போதிப்பதுமில்லை, சோதிப்பதுமில்லை.
‘வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன்’ என்ற வேதவாக்கியத்திற்கான பொருளை பாபாவின் அருகாமையில் உணர்ந்தேன்.
பாபாவின் படத்தின் கீழ் பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற பல்வேறு புத்தகங்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
பக்தர்களிடம் பாபா கேட்டுப் பெறும் பணத்தை உதவியாளரிடம் கொடுத்து கீதை புத்தகத்திலோ, குரானிலோ, பைபிளிலோ வைக்கும்படி சொல்கிறார். சிலநேரம் உதவியாளர் எதிலேனும் வைக்கும் பணத்தை வேறொரு புத்தகத்தில் மாற்றி வைக்கும்படி சொல்கிறார். ஒரு குழந்தை விளையாட்டு போல.
பாபா குறித்து புத்தகம் ஒன்று எழுதுவது தீர்மானித்து நாலைந்து பக்கங்கள் எழுதியும் விட்டேன். ஆயுத பூஜையையொட்டி அலுவலகம் சுத்தப்படுத்தியதில் வேண்டாத சில குறிப்புகள் இருக்க, பாபாவை பற்றி எழுதியதை யாரோ கிழித்து விட்டார்கள்.
இது எனக்கு ஒரு நெருடலாகப்பட்டது. அதற்குப் பின் ஒருவாரமாக எழுத முயன்றும் பேப்பர், பேனாவை எடுத்துவைத்தும் எழுத முடியாமலே போனது.
24ம் தேதி வாசுவுக்கு போன் பண்ணி பாபாவை பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.
காலையில் வாசுவோடு பைக்கில் போனேன். இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை நான் வாங்கிக் கொள்ள, வாசு பூ வாங்கி வந்தான்.
ஏற்கனவே மூன்றுபேர் உள்ளே இருந்தனர். பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்துவிட்டு அமர்ந்தேன். என்னிடம் திரும்பி கைநீட்ட  பணத்தைக் கொடுத்தேன்.
பணத்தை அவர் ஒரு போதும் அப்படியே வாங்கி வைக்கமாட்டார். கையால் தடவி மடிப்பு நீவி, மேலும் கீழுமாக உயர்த்தி கள்ளநோட்டை பரிசோதிப்பது போல பார்த்தே வைப்பார். ஒவ்வொருவரிடமும் பணம் பெறும் போது இதை தவறாமல் செய்வார். சிலரிடம் பணத்தைக் கேட்டு வாங்கி அதை நீவி அவர்களிடமே திருப்பியும் கொடுத்ததை பார்த்திருக்கிறேன்.
பாபா
தங்களைக் குறித்து
புத்தகம் எழுத
அனுமதிக்க வேண்டும்
துரை
என்று பேப்பரில் எழுதி எடுத்துப் போனதை அவரது கையில் கொடுத்தேன்.
அதை வாங்கிப்படித்தவர் எதுவும் சொல்லாமல் எதிரே இருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டார்.
சற்று நேரங்கழித்து புறப்பட்ட அவர் பேப்பரை என்னிடம் தந்து போனார். நான் கையில் விரித்து வைத்து பாபாவிடம் நீட்டினேன். அதைப்பார்த்த பாபா
‘அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியவர், வேறு புறம் திரும்பிக் கொண்டார். பிறகு என்பக்கம் திரும்பி ‘சரி’ என்றார்.
பிறகு வெளியேவந்து வாசு பேப்பரை வாங்கி பார்த்தவன், அனுமதியளியுங்கள், வழங்குங்கள், என்று எழுதாமல் அனுமதிக்கவேண்டும் என்று கட்டளை போல இருந்ததால்தான் அதை வேறு ஒருவரிடம்  கொடுத்துவிட்டார் என்று விளக்கினான்.
அது சரி
யார் யாருக்கு கட்டளையிடுவது?
யார் யாருடைய கட்டளைக்கு
பணிய வேண்டும்?
ஏன் கட்டளையை அவர்
ஏற்க வேண்டும்
என்றெல்லாம் கேள்வி எழுந்தது.
எப்படியோ ‘சரி’ என்று அவர் சம்மதம் தெரிவித்ததே சந்தோஷம்.
“தன்னைத்தானே அறிந்து கொள்ளும்
பக்குவம் பெற்றவரது உள்ளம்.
இரும்புப் பந்து. நெருப்பில்
நெருப்புப் பந்து தெரிவதுபோல்
பிரகாசம் ஏற்பட்டு வருகிறது.
உடல்உள்ளம் பற்றிய
சிந்தனைகள் அழிந்துவிடுகின்றன.

உணர்வு இருப்பதில்லை
இந்த நிலை அமைதி நிறைந்த
அதிக சக்திவாய்ந்த நிலையாகும்.
உடல் உருவத்தை முன்னிலைப்படுத்துவது
அறியாமையால் அதை
மறைக்கும் நிலைக்கு வளர்ந்துவிட்ட
வர்கள்தான் மறுபிறவி
பந்தத்தை அறுக்க முடியும்”
என்பது பகவான் ரமண
மகரிஷியின் வாக்கு. அந்த வாக்குகேற்ற வாழும் சாட்சி பரஞ்ஜோதி பாபா.
காற்றில்லா இடத் தீபத்தின்
அசையா நிலை போல்
ஆத்ம சாதக யோகியின் மனம்
அடங்கியே இருக்கும்
யோக சாதனையின் விளைவால் சித்தம்
என்று அமைதி பெறுகிறதோ,
என்று மனம் ஆத்மாவில்
ஆத்மனை அறிந்து மகிழ்கிறதோ,
புலன்களுக்கெட்டா அதனை
என்று யோகி அறிவானோ
யாக்கோபு 4:4 (பைபிள்)

எதில் நிலை பெற்று
அதனின்றும் அசையானோ
எதனை அடைந்தபின்
அதனின் மிக்கது வேறில்லையோ
எதனில் நிலையாயின்
துக்கமும் தன்னைத் தாக்காதோ
அதுவே யோகம்; தளரா உறுதியுடன்
தொடர்ந்து பயிலுக யோகம்!
பகவத்கீதை ஙஐ 1923
(ஆர்னால்டின் மொழிபெயர்ப்பு)

வாழ்வு சாவு இவைகளின்
மர்மத்திற்கு தீர்வு காண்பதுதான்
மனிதனின் மண்ணுலக வாழ்வின்
ஒரே குறிக்கோளாகும்
இந்த மர்மம் சுவாசத்துடன்
நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது.
மூச்சற்றிருப்பது மரணமற்றிருப்பதாகும்
இந்தியாவின் புராதன காலரிஷிகள்
இந்த உண்மையைப் புரிந்து கொண்டு
சுவாசம் தான் ஒரே விடை என்பதை
சரியானதும் விவேகமானதுமான
ஒரே மூச்சற்ற நிலையின்
கலையைக் கண்டறிந்தனர்
இந்தியா உலகிற்கு வேறு எந்தப்பரிசும்
கொடுக்காவிட்டாலும் கிரியா யோகம்
ஒன்றே போதுமான, ராஜாங்க வெகுமதியாகும்.

சில மர்மங்களை நிரந்தரத்தில்
தேடுவதற்காக விட்டு விடவும் என்பது
யோகி ஸ்ரீ யுக்தேஸ்வரின் வாக்கு.
பிரார்த்தனை என்பது உள்ளத்திற்குள்ளே உறைபவனுடன் நடத்தும் உரையாடலாகும். நீ ஆத்மா. நீ ஒரு நாளும் துயரம் அனுபவிக்க வேண்டியவனல்ல; நீ ஜீவாத்மா அல்ல; பரமாத்மாவே. நீ ஆனந்த வடிவானவன். இதுவே பிரார்த்தனையின் பொருள். அவ்வாறல்லாத வெறும் பொருளற்ற வார்த்தைகள் உண்மையான பிரார்த்தனையாகாது என்கிறார்மாதா அமிர்தானந்தமயி. இப்படி அவர் சொன்னதை கண்முன் காண நீங்கள் தவறாமல் ஒருமுறை பரஞ்ஜோதி பாபாவை சந்திக்க வேண்டும்.

Thursday, October 28, 2010

பிஸ்கெட் பாபா

“இருப்பதற்காகவே

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்”

இது கவிஞர் நகுலனின்

கவிதை வரிகள்

இப்படி இல்லாமல் போகச் செய்வதையே வடபழனியில் உள்ள பரஞ்ஜோதி பாபா! செய்கிறார்.

வெளுத்த சிகையும், ஜடா முடியும் தாடியுமான பாபாவிடம் வருபவர்கள் எல்லாம் அவருக்கு பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வந்து தருகிறார்கள்.

அவரும் தன்னைத் தேடி வருபவர்களுக்கு பிஸ்கெட் பாக்கெட்டுகளையே பிரசாதமாக வழங்குகிறார். ஆக, அவர் பிஸ்கெட் பாபாவாகத் திகழ்கிறார்.

பிஸ்கெட் பாக்கெட்டுகளின் மீது அவருக்குள்ள ஈடுபாடு குழந்தைகளையும் மிஞ்சக்கூடியது. தனக்கு இடப்புறம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை சீட்டுக்கட்டை கலைப்பதுபோல மாறி மாறி அடுக்குகிறார். வரிசையை முன் நகர்த்துகிறார். கொஞ்ச நேரத்தில் பிஸ்கெட் பாக்கெட் வரிசையை பின்நகர்த்துகிறார். பச்சைக் கலர் பாக்கெட்டுகளை மேலாகவும் நீலநிற பாக்கெட்டுகளை கீழாகவும் இரண்டு வரிசையாக அடுக்குகிறார். பின் அதையே மாற்றி நீலக்கலர் பாக்கெட்டுகளை மேலாகவும் பச்சைக் கலர் பாக்கெட்டுகளை கீழாகவும் மாற்றி அடுக்குகிறார். பின் வரிசையை தன்பக்கம் நகர்த்துகிறார். சற்றுநேரங்கழித்து அதை சற்று தள்ளி நகர்த்துகிறார்.

ஒருவர் பையை பாபா காலில் வைத்து வணங்குகிறார்.

பாபா பையை வீட்டுக்குவந்த விருந்தாளிகளின் பையை குழந்தைகள் ஆவலோடு பார்ப்பது போல திறந்து பார்க்கிறார்.

வந்தவரிடம் அதை எடுத்து தரும்படி கேட்கிறார்.

பிஸ்கெட் பாக்கெட், பேரிச்சம் பழம் இப்படி ஒவ்வொன்றாக பாக்கெட் பாக்கெட்டாக எடுத்துக் கொடுக்க அதைவாங்கி தனக்கு இடப்புறத்தில் அங்கும் இங்குமாக மாற்றி மாற்றி வைக்கிறார். எது அதற்குரிய இடம் என்பதில் தீவிர முனைப்போடு செயல்பட்டு அவற்றை வைக்கிறார்.

பாபாவின் இடப்புறம் பிஸ்கெட், மேஜையில் பிஸ்கெட், வாசலில் தட்டில் உடைத்து போடப்பட்ட பிஸ்கெட், அவரது படத்தின் கீழ் பிஸ்கெட், யாரோ அளித்த பெட்டி நிறைய பிஸ்கெட், பக்தர்கள் ஒவ்வொருவர் கையிலும் பிஸ்கெட் பாக்கெட். எலிவொன்றின் கீச், கீச் சத்தம் அறையில் தொடர்ந்து கேட்கும் அதேபோல பூனை ஒன்று சுதந்திரமாக அறையின் நாலா பக்கமும் திரியும், ஆட்கள் மத்தியில்.

ஆனால் ஒரு நாளும் பாபா ஒரேயொரு பிஸ்கெட்டைக் கூட சாப்பிட்டுப் பார்த்ததில்லை. ஒரு பிளாஸ்டிக் தட்டில் உடைத்துபோடப்பட்ட பிஸ்கெட்கள் பால் ஊற்றப்பட்டு எலிக்கோ, பூனைக்கோ எப்போதும் தயராகயிருக்கும். அவரை பார்க்க வரும் பக்தர்களிடம் ஒருவருக்கு பிஸ்கெட் பாக்கெட் தருவார். திரும்ப வாங்கி அதை மற்றவர்க்கு தருவார். மற்றவரிடம் வாங்கிய பிஸ்கெட் பாக்கெட்டை வேறொருவருக்கு தருவார். சிலரிடம் வாங்கியதை தராமல் தன்னருகே வைத்துக் கொள்வார். சிலருக்கு வெறும் கையை மட்டும் காட்டி பிஸ்கெட் தராமலே போகச் சொல்கிறார்.

பாபாவை பார்த்ததும் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போன்ற மெல்லிய அதிர்வு பரவுகிறது. எட்டடி குச்சில் அவரருகே தரையமர்ந்ததும் முதுகுக் தண்டில் ஒரு சிலிர்ப்பும் இரு புருவ மத்தியில் ஒளி அல்லது இருள் கவிழ்கிறது. அடுத்த சில நொடிகளில் காணாமல் போகிறோம்.

பசி, துக்கம், தூக்கம், ஆசை, கவலை, கர்வம், பொறுப்பு, காலம், இடம் இப்படி எல்லாமற்றவனாகி விடுகிறோம்.

காலி செய்து விடுகிறார்.

பாபா தனக்குத் தானே பேசிக் கொள்வதைத் தவிர ‘இரு’, ‘குடு’, ‘போ’ என்ற ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பிறரிடம் பேசுகிறார். எப்போதும் அவரைச் சுற்றிலும் அந்த சிறிய அறைக்குள் குறைந்தது இரண்டு மூன்று பேராவது கண் மூடி தியானத்திலிருப்பதை பார்க்கலாம்.

கர்மயோகம், ராஜயோகம், குண்டலினி பயிற்சி என்று பல்வேறு விதமான பெயர்களில் பெரிய பெரிய விளம்பரத்தோடு பன்னாட்டு நிதியோடு பக்தர்கள் புடை சூழ பிரமாண்டமான ஆஸ்ரமங்களில் மைக்கும், இசையுமாய் வழி காட்டுவதாகச் சொல்லப்படும் கார்ப்பரேட் சாமியார்கள் மத்தியில்

வடபழனி பரஞ்ஜோதி பாபா அருகே அமர்ந்ததுமே உன்னை காலியாக்குகிறார்.

உனக்கு எதுவும் போதிக்காமல்,

உனக்கு எதுவும் சொல்லாமல்,

உனக்கு எதையும் பயிற்றுவிக்காமல்,

காலியாக்குகிறார். அன்றாட செக்கு மாட்டு வேலைகளிலிருந்து விலகி சும்மா இருக்கச்செய்கிறார். சும்மா இருக்கும் சுகமறியேனே என்று நொந்து போனவர்களை சும்மாயிருக்கும் சுகமறிய செய்கிறார். அவர் போதிப்பதுமில்லை, சோதிப்பதுமில்லை.

பாபா குறித்து புத்தகம் ஒன்று எழுதுவது தீர்மானித்து நாலைந்து பக்கங்கள் எழுதியும் விட்டேன். ஆயுத பூஜையையொட்டி அலுவலகம் சுத்தப்படுத்தியதில் வேண்டாத சில குறிப்புகள் இருக்க, பாபாவை பற்றி எழுதியதை யாரோ கிழித்து விட்டார்கள்.

இது எனக்கு ஒரு நெருடலாகப்பட்டது. அதற்குப் பின் ஒருவாரமாக எழுத முயன்றும் பேப்பர், பேனாவை எடுத்துவைத்தும் எழுத முடியாமலே போனது.

24ம் தேதி வாசுவுக்கு போன் பண்ணி பாபாவை பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

காலையில் வாசுவோடு பைக்கில் போனேன். இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை நான் வாங்கிக் கொள்ள, வாசு பூ வாங்கி வந்தான்.

ஏற்கனவே மூன்றுபேர் உள்ளே இருந்தனர். பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்துவிட்டு அமர்ந்தேன். என்னிடம் திரும்பி கைநீட்ட பணத்தைக் கொடுத்தேன்.

பணத்தை அவர் ஒரு போதும் அப்படியே வாங்கி வைக்கமாட்டார். கையால் தடவி மடிப்பு நீவி, மேலும் கீழுமாக உயர்த்தி கள்ளநோட்டை பரிசோதிப்பது போல பார்த்தே வைப்பார். ஒவ்வொருவரிடமும் பணம் பெறும் போது இதை தவறாமல் செய்வார். சிலரிடம் பணத்தைக் கேட்டு வாங்கி அதை நீவி அவர்களிடமே திருப்பியும் கொடுத்ததை பார்த்திருக்கிறேன்.

பாபா

தங்களைக் குறித்து

புத்தகம் எழுத

அனுமதிக்க வேண்டும்

துரை

என்று பேப்பரில் எழுதி எடுத்துப் போனதை அவரது கையில் கொடுத்தேன்.

அதை வாங்கிப்படித்தவர் எதுவும் சொல்லாமல் எதிரே இருந்த ஒருவரிடம் கொடுத்துவிட்டார்.

சற்று நேரங்கழித்து புறப்பட்ட அவர் பேப்பரை என்னிடம் தந்து போனார். நான் கையில் விரித்து வைத்து பாபாவிடம் நீட்டினேன். அதைப்பார்த்த பாபா

‘அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியவர், வேறு புறம் திரும்பிக் கொண்டார். பிறகு என்பக்கம் திரும்பி ‘சரி’ என்றார்.

பிறகு வெளியேவந்து வாசு பேப்பரை வாங்கி பார்த்தவன், அனுமதியளியுங்கள், வழங்குங்கள், என்று எழுதாமல் அனுமதிக்கவேண்டும் என்று கட்டளை போல இருந்ததால்தான் அதை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டார் என்று விளக்கினான்.

அது சரி

யார் யாருக்கு கட்டளையிடுவது?

யார் யாருடைய கட்டளைக்கு

பணிய வேண்டும்?

ஏன் கட்டளையை அவர்

ஏற்க வேண்டும்

என்றெல்லாம் கேள்வி எழுந்தது.

எப்படியோ ‘சரி’ என்று அவர் சம்மதம் தெரிவித்ததே சந்தோஷம்.

“தன்னைத்தானே அறிந்து கொள்ளும்

பக்குவம் பெற்றவரது உள்ளம்.

இரும்புப் பந்து நெருப்பில்

நெருப்புப் பந்து தெரிவதுபோல்

பிரகாசம் ஏற்பட்டு வருகிறது.

உடல்உள்ளம் பற்றிய

சிந்தனைகள் அழிந்துவிடுகின்றன.



உணர்வு இருப்பதில்லை

இந்த நிலை அமைதி நிறைந்த

அதிக சக்திவாய்ந்த நிலையாகும்.

உடல் உருவத்தை முன்னிலைப்படுத்துவது

அறியாமையால் அதை

மறைக்கும் நிலைக்கு வளர்ந்துவிட்ட

வர்கள்தான் மறுபிறவி

பந்தத்தை அறுக்க முடியும்”

என்பது பகவான் ரமண

மகரிஷியின் வாக்கு. அந்த வாக்குகேற்ற வாழும் சாட்சி பரஞ்ஜோதி பாபா.

Tuesday, October 26, 2010

தாம்பத்ய ரகசியம்


வெளிக்காட்டும்

தாம்பூல இதழ் சிவப்பு!

Monday, October 25, 2010

ரஞ்சன் பராக்!

சர்வதேச நிறுவனமான ஜகான் நிறுவனமான ஜகான் நிறுவனம் திரைப்படத்துறையில் கால் பதிக்க உள்ளதாக டைரக்டர் கே.ராஜேஸ்வர் நேற்று சென்னையில் தெரிவித்தார்.


பல்வேறு மொழிகளிலும் கால் பதிக்கவுள்ள இந்த நிறுவனம் அமரன், இதயத்தாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களை இயக்கிய கே.ராஜேஸ்வரை வைத்து திடீர் நகரில் ஒரு காதல் கானா என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஜகான் நிறுவனர் ராஜ்மோகன்பிள்ளை தெரிவித்தார்.

இந்தியில் வசூலில் சக்கைபோடு போட்ட அரப் பிரேம்சி கஜப் கஹானி யின் கதையை எழுதியவர் ராஜேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வெற்றிக் கதையை டைரக்டர் கே.ராஜேஸ்வர் தனது மகன் ரஞ்சனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ஜகான் நிறுவன தயாரிப்பாக தமிழில் தர உள்ளார்.

நவம்பர் 12ல் சென்னையில் நடைபெறவுள்ள பட பூஜை விழாவில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, வைரமுத்து உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் ரஞ்சன் ஹீரோவாக முறையாக அறிமுகப்படுத்துவார் என்று டைரக்டர் கே.ராஜேஸ்வர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் வேண்டுகொளுக்கிணங்க ரஞ்சன் அழைக்கப்பட்டு அரங்கில் தோன்றினார்.

தமிழுக்கு இன்னொரு புது நல்வரவு என்று ரஞ்சனை பார்த்த மாத்திரத்திலேயே பலரும் பாராட்டியது வியக்கவைத்தது.

Tuesday, October 19, 2010

யோகியின் சரிதச் சிதறல்கள்

* உன் சக்தி வாய்ந்த மனது எதை நம்புகிறதோ அது உடனே நடக்கும்.

*நாம் தெய்வங்களை காணவில்லை எனில் அதன் காரணம் தெய்வத்தை நாம் நமக்குள்ளே இருத்தி வைக்கவில்லை உள்ளே இருப்பதைத்தான் வெளியே காண முடியும்.

*எதையும் சமநிலையில் பார்க்க வேண்டும் என்ற கொள்கை உடையவன் லாபத்தால் மகிழ்வதுமில்லை. நஷ்டத்தால் கலங்குவதுமில்லை.

இவ்வுலகில் மனிதன் வரும்போது சல்லிக்காசுகூட இல்லாமல்தான் வருகிறான். போகும் போதும் சல்லிக்காசு கூட இல்லாமல் தான் போகிறான்.

*சொற்களின் சக்தியை என்றும் தீங்கிழைக்க உபயோகிக்கக் கூடாது.

*ஆழ்ந்த மன ஒருமையுடன் உச்சரிக்கப்படும் சொற்களிலிருந்து வெடித்துக் கிளம்பும் அதிர்வலைகளின் ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்தினால் ஒருவருடைய வாழ்க்கையை துன்பங்களிலிருந்து விடுவிக்கமுடியும்.

*தடை செய்யப்பட்ட ஆசைகளிலிருந்து தான் கோபம் பிறக்கும்.

*மனம் அமைதியாக இருக்கும் வேளைகளில் உள்ளுணர்வு ஆன்மாவின் வழிகாட்டுதலாக, மனிதனுக்குள் இயற்கையாகவே தோன்றுகிறது. அனேகமாக ஒவ்வொருவரும் விளக்க முடியாத வகையில், நிகழப் போவதைப் பற்றிய சரியான கணிப்பு ஏற்பட்ட அனுபவம் அல்லது தன் எண்ணங்களை அப்படியே மற்றவருக்கும் மாற்றிவிட்டிருக்கும் அனுபவம் அடைந்தே இருப்பர்.

*உண்மையை படைக்க முடியாது. ஆனால் கண்டறிய முடியும். மனிதனின் புரிந்து கொள்ளும் தன்மையின் குறைபாடுதான் எந்தவொரு தவறான எண்ணத்திற்கும் காரணமாயிருக்கிறது.

*யோக விஞ்ஞானத்தின் குறிக்கோள், மனத்தை அமைதிப்படுத்தி நெறிபிறழாத வகையில் நம் உள்ளிருக்கும் தெய்வீகக் குரலின் தவறில்லாத ஆலோசனையைக் கேட்கச் செய்யலாம் என்பதுதான்.

*நீ உன் சாதாரணப் பொறுப்புகளை தட்டிக் கழிப்பதிலேயே உறுதியாக நின்றால் தொடர்ந்து துரதிர்ஷடங்களையே சந்திப்பாய். இறைவனை அடைய முடியாது. உலக அனுபவங்களில்லாமல் உன்னால் பழைய கர்ம வினைகளை களையமுடியாது.

*போலித்தனங்களை களைந்தெரியும் வரை மனிதன் நிலையான மெய்ப்பொருளை கண்டறியவே முடியாது.

மேம்போக்கான மனிதர்கள்தான் தம் குறுகிய சொந்தத் துயரங்களில் மூழ்கி மற்றவர்களின் துயரைப் பற்றிக் கவலைப் படாமலிருப்பார்கள்.

*சத்தியத்தை தேடுபவர்களுக்கு இந்தியாவின் எழுதப்படாத விதிமுறை பொறுமைதான்.

*உடலின் பழக்கத்திற்கு மனம் இடம் கொடுக்காதவரை உடல் என்ன செய்யமுடியும். உடலின் ஆளுகைக்கு மனதை அடிமையாக விடாதே.

Monday, October 18, 2010

அஹம் ப்ரம்மாஸ்மி

ஆற்றின் வெள்ளத்தின் சலசலப்பின் புதுவெள்ளத்தில் திளைக்க திளைக்க இடம் வலம் கீழ் மேலென்று கைகளையும் கால்களையும் அசைத்து தன் போக்கில் விளையாடிய பாலகனை காவித்துணியொன்று தேடிவந்து அணைகிறது.


முதலைவாய் சிக்குண்டவனாய் சிறுவன் துடிக்கிறான். காவி அவனை சுற்றிக் சூழ்ந்து நீரின் ஆழத்துக்குள் இழுக்கிறது.

ஆர்யாம்பாள் மூழ்கிக் கொண்டிருந்த மகனை பார்த்து துடித்தாள். தந்தையை இழந்த புதல்வன் அவனையாவது கடவுளே எனக்காக விட்டுவையும். அவனை உமக்கே தத்தம் தருகிறேன் என்று ஆற்றின் மணல்கள் எதிரொலிக்க நதியோட்டத்தில் கலக்க கதறினாள்.

காவியோடு பாலகன் யானை துதிக்கையால் தூக்கி எடுத்தது போல நீரிலிருந்து வெளிக்கிளம்பி கரை நோக்கி நடந்து வந்தான்.

ஆர்யாம்பாள் அவனது தேஜசையும் பொலிவையும் பார்த்து பூரித்து சாஸ்டாங்கமாக காலில் விழுந்து ஆதிசங்கரா என்று பாதத்தில் முத்தமிட்டாள். 25 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவை கால்நடையாக மூன்று முறை வலம் வந்து கிழக்கே வெளுப்பு, மேற்கே வெளுப்பு, தெற்கே வெளுப்பு, வடக்கே வெளுப்பு என்று திக்கெட்டும் பனிபோர்த்திய மலைகளின் நடுவே நின்று கூறினான் அஹம் ப்ரம்மாஸ்மி!

.................

இதுதான் ஜி.வி.அய்யரின் ஆதிசங்கராள சமஸ்கிருதப்படத்தில் சங்கரன்ள சந்நியாசம் பெற்ற காட்சி படமாக்கப்பட்டது.

கலைஞன் எதைவேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம் சிந்தனையும் மொழியும் இவனது கலையின் உபகரணங்கள்.... ஆபத்தை சந்தித்துத்தான் இவர்கள் அந்தத்தளத்தின் ஆழத்துக்குச் செல்கிறார்கள் இது ஒரு பார்வையாளனின் வாழ்க்கையல்ல. இந்தக்கலை உண்மையின் கண்ணாடிகள்.

கல் குதிரை! பனிக்காலங்களில்

இதழில் புத்தரின் தோளில் கீறி டாவின்சி துப்பாக்கி ஒவியம் கட்டுரையில் கோணங்கி.

மகாகவி பிரமிளின் (தொடர்ச்சி)

எண்பத்து மூன்றிலன்றி எழுபதில் லங்கைவிட்டு

இங்கு வந்த எனக்கு

புலம் பெயர்ந்த புள்ளிவிவரம் பொருந்தாது

ஏன் வந்தேன் என்பதற்கு

நியூஸ் உலகத்து நியமங்கள் ஏதுமில்லை

சுயத்தின் சூனியத்தை நிரப்பும்

ஜாதிக் செருக்கு இல்லாதவன் நான்

கல்லூரி முத்திரை பதித்த காகிதமே

சமுத்திரம் என்கிற சான்றிதழ் எதற்குள்ளும்

அடங்காது என் மூளை. அன்றாட அற்புதத்தை

மனிதார்த்த நுட்பங்கள் உள் முரண்கள் என்பவற்றை

உன் கட்சி என் கட்சி என்று பிரித்து

கண் கெட்டுப் பார்க்கிற கருத்தாளி அல்ல நான்

ஊன்றிய காலை எடுத்து இன்னொரு

இடத்தில் வைத்தால்

முந்திய இடமும் பிந்திய இடமும்

பூமிதான் எனக்கு. எனவே எனக்கு

நாடில்லை நாமம். இதுவென்று ஒன்றில்லை

வருமானப் புள்ளிகளை வைத்துத் தொழும்

சுன்னங்களில் சொத்தில் என் ஆளுமை இல்லை

நிலத்தைப் பிடுங்க முயன்றவர் சூழலில்

எலும்பை நாய்க்கு எறிவது போல் அதை

எத்தர் விலைக்கு விற்றுவிட்டு

வந்த என் பெயரைப் பிறப்பு விபரத்தை

திருக்கோண மலையின் ரெஜிஸ்ட்ரியில் கூட

எரித்தது ஆங்கே எழுந்த நெருப்பு

தெரிந்து கொள் நான்

பதிவேடுகளைத் தாண்டி பரந்து நிற்பவன்

தன்மயக் கிணற்றுக்குள் தலைகீழாய்த் தொங்கி

தூர் எடுத்து ஊற்றின் கண்ணடைப்பை நீக்கி

ஊரருந்தப் புதுநீர் ஊறச் செய்யும் கவிநான் அடா!

நீரருந்த தாகம் வேண்டும்

அது கூட இல்லாத

கல் மண்டை கருத்தாளிகளுக்கு

கவிதை ஒரு கேடா?

கட்சிக் கருத்துக்குள் கட்டுப்படுமா கனலும் கவித்துவம்?

தர்க்க சிகரம் மாதமாடிக்ஸில் பீ ஹெச் டீ நீ

ஆயினும் கவித்துவ ஆய்வுக்கு வந்தால்

உன் தர்க்கம் காலி! போதாதுக்கு

டாக்டரேட் இன் இன்ஜினியரிங் வேறு

வாழ்வதோ சிருஷ்டி நெருப்புக்கு முன்

கல்விமான்கள் குவிந்து குளிர்காயும் லண்டன்!

கணிப்பொறி மூளையாய்க் கற்றதை ஒப்பிக்கும்

உனக்கேன் உள்ளுணர்வில் கிளர்ந்து உயிரின்

தகிப்பாய் எரியும் கவிஞனின் வேலை?

சினை முட்டை நிற்கும் வாசக மூளைக்குள்

கவி விந்து பாய்ந்தால் கருக்கூடும்

ஒரு புதுப் பிரக்ஞை பிறக்கும்

முதலில் சும்பித்து உடனே துப்பும்

உன் ஆய்வு வாய்க்குள்

கருக்கூடுமா கவிதையின் உயிர்ப்பு?

............................

என்ன கம்பீரம்; கவிதா விலாசம்; தெளிவு; சூழலை குறித்த பார்வை; கண்ணனின் விஸ்வரூபம் பிரமிளின் இந்த பிரகடனம்; கோடானுகோடி காலத்திலும் உதிக்கிற சுயம்புவான கலைஞனுக்கு இதுவே அடையாளம்.

இந்த ஒரு கவிதையை முன்வைப்பதன் மூலம் பிரமிளை உங்களுக்கு அவரது மொழியிலேயே அடையாளப்படுத்துகிறேன்.

இது காலத்தை வென்ற ஒரு மகாகவியின் பிரகடனம் என்றென்றைக்கும் ஒலிக்கும் பாஞ்ஜசன்யம்.

Friday, October 15, 2010

மகாகவி பிரமிளின் பிரகடனம்

கவிஞர் பிரமிள் கவிதையின் உச்சக்கட்டம்; அற்புதம்; சித்தபுருஷர்.
தமிழிலும் அதேபோல ஆங்கிலத்திலும் திறம்பட எழுதக்கூடியவர். அவரது மொழிபெயர்ப்புகளில் மொழி செலுமை ஆட்சி செய்யும். ‘The isle of the Buddha’ கவிதை நாடகம். இப்போதும் தேர்ந்த கலைஞர்களால் அரங்கேற்றப்படக்கூடிய காவிய நயமும் இன்றைய அரசியல் வன்முறையையும் முன்வைப்பது.
EPIC
A feather detaching it self
from thw wing
Render on the
passage of the wind
The life of the bird
காவியம்
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் இலகுவாக மொழி பெயர்க்கக்கூடியவர். ஆங்கிலத்தில் தேர்ந்த புலமையோடு எழுதக் கூடியவர். ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலக் கவிதைகள் எழுதி அவை Quest, Century, Avenues போன்ற பத்திரிகைகளில் அவை வெளிவந்திருக்கின்றன.
நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஒர் உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம் களிமண் சிற்பங்கள் செய்வதிலும் தேர்ந்தவர்.
இவரது ஆன்மீக ஈடுபாடு இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக்கவிஞர்’ என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்காலசுப்ரமணியம் குறிப்பு.
பிரமிளை, சாதாரண மனிதர்கள் எளிதில் நெருங்கிப் பழகிவிட முடியும். பெட்டிக்கடை காரர்களோடு கூட சிநேகமாகப் பேசுவார். குடிசைவாழ் மக்களோடும் பேசிப் பழகச் கூடியவர்.
‘எழுதுகிறேன் பேர்வழி’ என்று அவரிடம் பேசத் தொடங்கினால் நார்நாராக கிழித்தெறிந்து வார்த்தைகளில் தொங்க விட்டுவிடுவார்.
இதனால் பலரும் மரியாதையோடு எட்ட நின்றே பேசியதை கூட இருந்து பார்த்திருக்கிறேன். அதில் இப்போது ஜாம்பவான்களாக திரியும் சிலரும் அடக்கம்.
அவரது பேச்சில் எப்போதும் நக்கல், நையாண்டி, குதர்க்கம் இருந்து கொண்டே இருக்கும். நடக்க சளைக்காதவர், தெருவில் விளையாடும் குழந்தைகளை கண்ணாடியை உயர்த்தி வியப்போடு பார்ப்பார். அவர்களை அழைத்துப் பேசுவார். தெருவென்றும் பாராமல் கைதட்டி பலமாகச் சிரிப்பார். அவரோடு நடப்பதென்பதே உற்சவரோடு தெருவீதி வந்த மாதிரியாக இருக்கும். புறச் சூழல் பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாதவர். ஒருபோதும் அவர் எதற்காகவும் வருத்தப்பட்டோ சோர்வுற்றோ பதட்டப்பட்டோ பார்த்ததேயில்லை.
எப்போதும் ஓடிவிளையாடுகிற பருவத்து குழந்தை போன்று உற்சாகமாகவே இருப்பார். நக்கீரனில் நான்வைத்த தடாலடி டைட்டில்களை கண்விரித்து வாய்பிளந்து ரசிப்பார். அதில் மெல்லியதாக கேலி இருக்கும்.
எனக்குத் தெரிந்து அவர் எந்த மனிதரையும் உயர்ந்தவரென்று மரியாதை தந்ததோ தாழ்ந்த வரென்று மரியாதைக் குறைவாக நடத்தியதோ இல்லை.
பிரகடனம் என்ற விமர்சனக் கவிதையில் அவரே தமிழ் இலக்கியச் சூழலையும் அதில் அவரது அழியா இடத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
அன்றொரு நாள்
ஐன்ஸ்டீனிய மனிதக்கணக்கை அவர்தம்
கணிதார்த்த சாம்யக் கருத்தில் இழுத்த என்     கவிதைக்குச் ‘சிற்பி’ அளித்த பரிசைப் பார்த்து
வயிறெரிந்த தி.க.சி.
கட்சி மந்திரம் ஓதி உச்சூ என்றதும்
கவித்துவ மின்னோட்ட ரகசியம் புரியாமல்
குதறப்புகுந்து சுருண்டு விழுந்தனர் சில சீடர்கள்
இப்போது மார்க்ஸீயம், மாதமாடிக்ஸ், சாமீயம்
எல்லாம் தம் வரட்டுப் பிராண்டல் விமர்சனத்துள்
அடக்கம் என்று வந்து நிற்கிறார் சிவசேகரம்
பதிவேட்டுப் பெயரும் பிறந்தபதி இது என்றும்
இன்னொரு சிவா சொன்னதுக்கு மாறாய்
இவர் முகப்பில் நான் பிறந்த விபரக்குவா குவா
முகப்பிலே இல்லாத ஓட்டை ஒன்று
தம்பியார் நினைவிலே தங்கியிருப்பதை
இங்கே தருகிறேன்.
அன்றவர் என்னிடம் தந்த கவிதை பற்றி
‘கவித்துவ உயிரில்லை’ என்று நான் சொன்னதது!
யந்திரத்தனம் கொண்ட அனைவரின் இயல்பு
‘விட்டேனாபார்!’ என்று எழுதவைத்தது அவரை
எல்லாமே உயிரற்ற புரட்சி குணமற்ற
கருத்துச் செறிவற்ற கண்டுபிடிப்பற்ற
தவளைக் கூச்சல்.
அதற்கந்த யுகமந்திரம் மார்க்ஸீயம்தான்
ஆதார சுருதியாம்.
இவருக்கு முந்திய கட்சீய உச்சுக்சூத்
தலைவர் தி.க.சி.
அவர் ஏவிப்பாய்ந்த கார்லோஸ் அன்ட் கோ.ரா.
மற்றும் கனகரட்னா என்ற ராஜசேகரன்;
இப்போது புதுஸாய் இந்த சிவசேகரம்
ஒவ்வொருத்தர் எழுத்தும் அதே கொழ கொழ!
இதை விமர்சித்தால், ஒண்ட இடம் தேடி,
மார்க்ஸீக்குள் ஒளிக்குது மண்டூகக் கூட்டம்!
கவின் தமிழ் எழுத்தில் கிசுகிசுத்த ஜாதீயக்
குரல்கள் ஞா.கூ. சு.ரா.வெ.சாக்கள்
முழுப்பேர் வழிகளையும் தோலுரித்த என் எழுத்தே
மார்க்ஸீய புரட்சி மனோநிலைக்கு
இங்கே இலக்கணம்.
கட்சீய முத்திரையைத் தாண்டிக் கனலும்
புரட்சிகரம், இதை உணரும் விஞ்ஞான
வாசகமனோபாவம் இல்லாத மௌடீகர்
வழங்கும் ஆய்வுத் தீர்ப்பு நிற்கிறது.
‘பார் என் அழகை’ என்று கால்பரப்பி
காலத்தின் கழுவில்!
குடும்பப் பெருமைகள், பட்டம், பதவிப்
பவிஷீகள் எதற்கும் பிடிபடாக் கவித்வம்
எனக்குள் அடக்கம். இதனால் என்னை
நேர்முகத்தில் அறிந்த பணக்கார முட்டாள்
படிப்பாளிகள் சிலருக்கு எரிகிறது வயிறு!
விளைவு அவர்தம் விசித்திர ஆய்வு!

II
ஆய்வுத் தர்ககம் விஞ்ஞான பூர்வ
வாசக விழிப்பின் கண்காணிப்பு
எல்லாவற்றையும் துச்சமாக்கு
பிரமிள் மீது காறித்துப்பு
துப்பினால் அதோ உச்சாணிக்கொம்பு
அதில் இருக்கிறது தேவாங்கு
உமிழ்நீர் கடாஷம் தரும் அது எனக்கு
என்பது தானே சிவாவின் கணிப்பு
புதுக்கவிதையின் விசேஷத்தன்மை
யாப்பினை மீறல் அல்ல, இதனை
யாப்பியல் நூலில் கவிஞன் சி.மணி
அன்றே அறுதிஇட்டதைக் கவனி.
கணிப்பொறித்தனமாய் ஓடும் பிரக்ஞை
திடுக்கிடும்படிக்கு பிறக்கும் புதுவிதக்
கருத்தமைப்புத்தான் கவித்துவம் இனி
என்பது பாரதியின் சொல்புதிது
பொருள் புதிது என்ற வித்து.
பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், பின்
பிரமிள் வரை இது சித்தாந்தமாயிற்று
இதுவே இன்று கிளைபரப்பிநிற்கும்
பெருவிருட்சம். இதனை அறியாத நீ
 எழுத்து வின் புதுக்கவிதை இயக்கம்
மரித்துவிட்டது என்று பிதற்றுகின்றாயே
கருத்துருவத்தை உணர்ந்து திடுக்கிட்டு
விழிப்படைகிற பிரக்ஞை உனக்குண்டா!
உதாரணமாக துடித்து அன்று
விழுந்த பகலை மீண்டும் மிதித்து
நடப்பவளே என்ற என் கவிவரி
உனது மண்டைக்கு புரியாது தம்பி
துடித்து அன்று விழுந்த சாமான்
பகலாகாது பல்லி தான்
என்று பல்லை இனிக்கும் தினுசுதான் நீ
E இஸ் ஈகுவல்டு mc2 சி
என்ற சாம்யத்தின் மாதமிடிக்ஸ்
கட்டமைப்புக்கு வெளியே நான் நீ
என்கிற மனிதவர்க்கம் முழுவதையும்
அச்சுறுத்தி எழுந்த ஆயுத
ராக்ஷஷத்தனம் தான் என் கவிதைப் பொருள்
அந்த சாம்யக்தை அறியா வாசகர்
கூட உள்ளனர். அவருக்கு அது தரும்
அதிர்ச்சி விரிவு என்பதை கவிதா
உணர்ச்சியில் கிளர்ந்து பிறப்பவை
கூட்டத்தை தாண்ட மீறும் எனது இயல்பை
புரிந்து கொள்ளத் திராணி அற்று
தமக்குத் தாமே போட்ட கட்டத்தை
தாண்ட முடியாமல் தவிக்கும் எழுத்து
சி.சு.செ. போன்ற பெரியவர்களும்
என்றோ ஒரு சில வருடங்கள் மட்டும்
ஏனோ தானோ என்றென் எழுத்தில்
நுனிப்புல் மேய்ந்த சிவசிவாக்களும்
தர்மு சிவராமு பெயருக்குள் மட்டும்
எனது இயக்கம் முழுவதையுமே
முடக்க முனைவது மடிசஞ்சித்தனம். அது
அறிவார்த்தக் கண்காணிப்பு ஆகாது.
சிருஷ்டி சிந்தனை  புரட்சிகரம் எல்லாம்
முதிர்ச்சி பெற்று வெளிப்பட்ட எனது
எழுத்தின் பெருந்தொகைக்குரியதாய்
பிரமிள் என்ற பெயரே நிலைத்து வழங்கும்
PRAMIL என்பது இதற்கு ஆங்கிலவடிவம்.

ஊரை ஏய்க்கும் அரசியல் குடும்பம்
எனதல்ல; கட்சி, மொழி, மதவெறிகள்
என் வாழ்வின் மூலதனமல்ல; அயலான்
 உடன் வாழ முடியாத தடையேதும் இல்லா
 உயிர் நான்; இதனை உணர்த்துவதுதான்
என் வேலை
(தொடரும்)

மகாகவி பிரமிளின் பிரகடனம்

கவிஞர் பிரமிள் கவிதையின் உச்சக்கட்டம்; அற்புதம்; சித்தபுருஷர்.

தமிழிலும் அதேபோல ஆங்கிலத்திலும் திறம்பட எழுதக்கூடியவர். அவரது மொழிபெயர்ப்புகளில் மொழி செலுமை ஆட்சி செய்யும். கவிதை நாடகம். இப்போதும் தேர்ந்த கலைஞர்களால் அரங்கேற்றப்படக்கூடிய காவிய நயமும் இன்றைய அரசியல் வன்முறையையும் முன்வைப்பது.
‘The isle of the Buddha’


EPIC


A feather detaching it self

from thw wing

Render on the

passage of the wind

The life of the bird




காவியம்

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச் செல்கிறது

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் இலகுவாக மொழி பெயர்க்கக்கூடியவர். ஆங்கிலத்தில் தேர்ந்த புலமையோடு எழுதக் கூடியவர். ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலக் கவிதைகள் எழுதி அவை போன்ற பத்திரிகைகளில் அவை வெளிவந்திருக்கின்றன.
Quest, Century, Avenues


நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார். புதுக்கவிதை, விமர்சனம், சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஒர் உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது. ஓவியம் களிமண் சிற்பங்கள் செய்வதிலும் தேர்ந்தவர்.

இவரது ஆன்மீக ஈடுபாடு இலக்கிய ஈடுபாட்டுக்கும் மேலானதாக இருந்து வந்திருக்கிறது. ‘படிமக்கவிஞர்’ என்றும் ஆன்மீகக் கவிஞர் என்றும் சிறப்பிக்கப்பட்ட இவரது கவித்துவம், இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை வரலாற்றில், தனித்துயர்ந்து நிற்பதாகும்காலசுப்ரமணியம் குறிப்பு.

பிரமிளை, சாதாரண மனிதர்கள் எளிதில் நெருங்கிப் பழகிவிட முடியும். பெட்டிக்கடை காரர்களோடு கூட சிநேகமாகப் பேசுவார். குடிசைவாழ் மக்களோடும் பேசிப் பழகச் கூடியவர்.

‘எழுதுகிறேன் பேர்வழி’ என்று அவரிடம் பேசத் தொடங்கினால் நார்நாராக கிழித்தெறிந்து வார்த்தைகளில் தொங்க விட்டுவிடுவார்.

இதனால் பலரும் மரியாதையோடு எட்ட நின்றே பேசியதை கூட இருந்து பார்த்திருக்கிறேன். அதில் இப்போது ஜாம்பவான்களாக திரியும் சிலரும் அடக்கம்.

அவரது பேச்சில் எப்போதும் நக்கல், நையாண்டி, குதர்க்கம் இருந்து கொண்டே இருக்கும். நடக்க சளைக்காதவர், தெருவில் விளையாடும் குழந்தைகளை கண்ணாடியை உயர்த்தி வியப்போடு பார்ப்பார். அவர்களை அழைத்துப் பேசுவார். தெருவென்றும் பாராமல் கைதட்டி பலமாகச் சிரிப்பார். அவரோடு நடப்பதென்பதே உற்சவரோடு தெருவீதி வந்த மாதிரியாக இருக்கும். புறச் சூழல் பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாதவர். ஒருபோதும் அவர் எதற்காகவும் வருத்தப்பட்டோ சோர்வுற்றோ பதட்டப்பட்டோ பார்த்ததேயில்லை.

எப்போதும் ஓடிவிளையாடுகிற பருவத்து குழந்தை போன்று உற்சாகமாகவே இருப்பார். நக்கீரனில் நான்வைத்த தடாலடி டைட்டில்களை கண்விரித்து வாய்பிளந்து ரசிப்பார். அதில் மெல்லியதாக கேலி இருக்கும்.

எனக்குத் தெரிந்து அவர் எந்த மனிதரையும் உயர்ந்தவரென்று மரியாதை தந்ததோ தாழ்ந்த வரென்று மரியாதைக் குறைவாக நடத்தியதோ இல்லை.

பிரகடனம் என்ற விமர்சனக் கவிதையில் அவரே தமிழ் இலக்கியச் சூழலையும் அதில் அவரது அழியா இடத்தையும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

   அன்றொரு நாள்

   ஐன்ஸ்டீனிய மனிதக்கணக்கை அவர்தம்

   கணிதார்த்த சாம்யக் கருத்தில் இழுத்த என்

   கவிதைக்குச் ‘சிற்பி’ அளித்த பரிசைப் பார்த்து

   வயிறெரிந்த தி.க.சி.

   கட்சி மந்திரம் ஓதி உச்சூ என்றதும்

   கவித்துவ மின்னோட்ட ரகசியம் புரியாமல்

   குதறப்புகுந்து சுருண்டு விழுந்தனர் சில சீடர்கள்

   இப்போது மார்க்ஸீயம், மாதமாடிக்ஸ், சாமீயம்

   எல்லாம் தம் வரட்டுப் பிராண்டல் விமர்சனத்துள்

   அடக்கம் என்று வந்து நிற்கிறார் சிவசேகரம்

   பதிவேட்டுப் பெயரும் பிறந்தபதி இது என்றும்

   இன்னொரு சிவா சொன்னதுக்கு மாறாய்

   இவர் முகப்பில் நான் பிறந்த விபரக்குவா குவா

   முகப்பிலே இல்லாத ஓட்டை ஒன்று

   தம்பியார் நினைவிலே தங்கியிருப்பதை

   இங்கே தருகிறேன்.

   அன்றவர் என்னிடம் தந்த கவிதை பற்றி

   ‘கவித்துவ உயிரில்லை’ என்று நான் சொன்னதது!

   யந்திரத்தனம் கொண்ட அனைவரின் இயல்பு

   ‘விட்டேனாபார்!’ என்று எழுதவைத்தது அவரை

   எல்லாமே உயிரற்ற புரட்சி குணமற்ற

   கருத்துச் செறிவற்ற கண்டுபிடிப்பற்ற

   தவளைக் கூச்சல்.

   அதற்கந்த யுகமந்திரம் மார்க்ஸீயம்தான்

   ஆதார சுருதியாம்.

   இவருக்கு முந்திய கட்சீய உச்சுக்சூத்

   தலைவர் தி.க.சி.

   அவர் ஏவிப்பாய்ந்த கார்லோஸ் அன்ட் கோ.ரா.

   மற்றும் கனகரட்னா என்ற ராஜசேகரன்;

    இப்போது புதுஸாய் இந்த சிவசேகரம்

   ஒவ்வொருத்தர் எழுத்தும் அதே கொழ கொழ!

   இதை விமர்சித்தால், ஒண்ட இடம் தேடி,

   மார்க்ஸீக்குள் ஒளிக்குது மண்டூகக் கூட்டம்!

   கவின் தமிழ் எழுத்தில் கிசுகிசுத்த ஜாதீயக்

   குரல்கள் ஞா.கூ. சு.ரா.வெ.சாக்கள்

   முழுப்பேர் வழிகளையும் தோலுரித்த என் எழுத்தே

   மார்க்ஸீய புரட்சி மனோநிலைக்கு

   இங்கே இலக்கணம்.

   கட்சீய முத்திரையைத் தாண்டிக் கனலும்

   புரட்சிகரம், இதை உணரும் விஞ்ஞான

   வாசகமனோபாவம் இல்லாத மௌடீகர்

   வழங்கும் ஆய்வுத் தீர்ப்பு நிற்கிறது.

   ‘பார் என் அழகை’ என்று கால்பரப்பி

   காலத்தின் கழுவில்!

   குடும்பப் பெருமைகள், பட்டம், பதவிப்

   பவிஷீகள் எதற்கும் பிடிபடாக் கவித்வம்

   எனக்குள் அடக்கம். இதனால் என்னை

   நேர்முகத்தில் அறிந்த பணக்கார முட்டாள்

   படிப்பாளிகள் சிலருக்கு எரிகிறது வயிறு!

   விளைவு அவர்தம் விசித்திர ஆய்வு!



II
   ஆய்வுத் தர்ககம் விஞ்ஞான பூர்வ

   வாசக விழிப்பின் கண்காணிப்பு

   எல்லாவற்றையும் துச்சமாக்கு

   பிரமிள் மீது காறித்துப்பு

   துப்பினால் அதோ உச்சாணிக்கொம்பு

   அதில் இருக்கிறது தேவாங்கு

   உமிழ்நீர் கடாஷம் தரும் அது எனக்கு

   என்பது தானே சிவாவின் கணிப்பு

   புதுக்கவிதையின் விசேஷத்தன்மை

   யாப்பினை மீறல் அல்ல, இதனை

   யாப்பியல் நூலில் கவிஞன் சி.மணி

   அன்றே அறுதிஇட்டதைக் கவனி.

   கணிப்பொறித்தனமாய் ஓடும் பிரக்ஞை

   திடுக்கிடும்படிக்கு பிறக்கும் புதுவிதக்

   கருத்தமைப்புத்தான் கவித்துவம் இனி

   என்பது பாரதியின் சொல்புதிது

   பொருள் புதிது என்ற வித்து.

   பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், பின்

   பிரமிள் வரை இது சித்தாந்தமாயிற்று

   இதுவே இன்று கிளைபரப்பிநிற்கும்

   பெருவிருட்சம். இதனை அறியாத நீ

   எழுத்து வின் புதுக்கவிதை இயக்கம்

   மரித்துவிட்டது என்று பிதற்றுகின்றாயே

   கருத்துருவத்தை உணர்ந்து திடுக்கிட்டு

   விழிப்படைகிற பிரக்ஞை உனக்குண்டா!

   உதாரணமாக துடித்து அன்று

   விழுந்த பகலை மீண்டும் மிதித்து

   நடப்பவளே என்ற என் கவிவரி

   உனது மண்டைக்கு புரியாது தம்பி

   துடித்து அன்று விழுந்த சாமான்

   பகலாகாது பல்லி தான்

   என்று பல்லை இனிக்கும் தினுசுதான் நீ

   E

   என்ற சாம்யத்தின் மாதமிடிக்ஸ்

   கட்டமைப்புக்கு வெளியே நான் நீ

   என்கிற மனிதவர்க்கம் முழுவதையும்

   அச்சுறுத்தி எழுந்த ஆயுத

   ராக்ஷஷத்தனம் தான் என் கவிதைப் பொருள்

   அந்த சாம்யக்தை அறியா வாசகர்

   கூட உள்ளனர். அவருக்கு அது தரும்

   அதிர்ச்சி விரிவு என்பதை கவிதா

   உணர்ச்சியில் கிளர்ந்து பிறப்பவை

   கூட்டத்தை தாண்ட மீறும் எனது இயல்பை

   புரிந்து கொள்ளத் திராணி அற்று

   தமக்குத் தாமே போட்ட கட்டத்தை

   தாண்ட முடியாமல் தவிக்கும் எழுத்து

   சி.சு.செ. போன்ற பெரியவர்களும்

   என்றோ ஒரு சில வருடங்கள் மட்டும்

   ஏனோ தானோ என்றென் எழுத்தில்

   நுனிப்புல் மேய்ந்த சிவசிவாக்களும்

   தர்மு சிவராமு பெயருக்குள் மட்டும்

   எனது இயக்கம் முழுவதையுமே

   முடக்க முனைவது மடிசஞ்சித்தனம். அது

   அறிவார்த்தக் கண்காணிப்பு ஆகாது.

   சிருஷ்டி சிந்தனை புரட்சிகரம் எல்லாம்

   முதிர்ச்சி பெற்று வெளிப்பட்ட எனது

   எழுத்தின் பெருந்தொகைக்குரியதாய்

   பிரமிள் என்ற பெயரே நிலைத்து வழங்கும்

    PRAMIL  என்பது இதற்கு ஆங்கிலவடிவம்.



   ஊரை ஏய்க்கும் அரசியல் குடும்பம்

   எனதல்ல; கட்சி, மொழி, மதவெறிகள்

   என் வாழ்வின் மூலதனமல்ல; அயலான்

   உடன் வாழ முடியாத தடையேதும் இல்லா

   உயிர் நான்; இதனை உணர்த்துவதுதான்

   என் வேலை

(தொடரும்)
இஸ் ஈகுவல்டு mc2

Thursday, October 14, 2010

சுமை - சிறுகதை

பஸ்புறப்படத் தயாராயிருந்தது. நண்பனின் சட்டையில் அவனிருந்தான். “இந்தப் பய ஊருக்கு நீ சொல்ற உலகமும் தெரியாது. சினிமாவும் தெரியாது. எப்படியோ உனக்கு எது சரின்னு படுதோ அதைச் செய்யி.. நான் சொல்றதுக்கு ஒன்ணுமில்ல. எங்காலம் இப்பவோ அப்பவோ” அப்பாவின் குரலில் சொல்ல முடியாதசோகமிருந்தது.
ஸோல்னாப் பைக்குள்ளிருந்த சங்கரன் சிலையை அப்பாவிடம் காட்டலாமா என்று யோசித்தபோது, பஸ் ஸ்டார்ட்டாக, “பாத்துக்கோப்பா. போயி லெட்டர் போடு” என்றபடி அப்பா பிளாட்பார்மிலிருந்து குரல் கொடுத்தார். பஸ்ஊருக்குள் வேகங்காட்டி ரயில்வே கேட் தாண்டி நிதானமாயிற்று. இவனுக்குத் தோளில் கிடந்த பை அதிகம் கனத்தது. இறக்கி பையை மேலே லக்கேஜில் வைத்தான்.
பிரம்மாண்டமான பெங்களூர் சௌடையா ஹாலில் அலங்கரிக்கப்பட்ட மேடை அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளின் ஒளி வெள்ளத்தில்... நாகரிக உடை நங்கையர் இருவர் பூத்தூவ மைக்கில் இவன் போ. சொல்லி அழைக்க அமைச்சர் கைகுலுக்கி வரவேற்க பெரும் இயக்குநர் புட்டண்ணா அந்த ஆதிசங்கரர் வெண்கலச் சிலையை வழங்கியபோது...
தான் தானா வாங்கியது.. தனக்கா, தமிழகத்தின் தென்கோடி கிராமத்துப் பையனுக்கா, தேசிய விருதுபெற்ற உலகின் முதல் சமஸ்கிருத படத்தில் பணியாற்றியதற்கான விருது...
எழுதப்படிக்கத் தெரியாத அம்மாவிடம் ஊர்ப்பக்கமே வராத இந்தப் படத்திற்காக முழுமையாய் நாலுவருஷம் கடிதம் கூடப் போடாமல் ஈடுபட்டதை... டைரக்டர் ஐயரின் வளர்ப்பாய் பால் பாக்கெட் வாங்குவதிலிருந்து ராத்திரி அவர் தூங்க ஐயோடெக்ஸ் போட்டு கால்தேய்த்தது வரை...
குதிரைமுக்கில் சங்கரன் வேட்டியில் காலருகே X 163 காதிபோர்டு எழுதியிருந்ததை கவனிக்காததற்காக யூனிட் வேடிக்கை பார்க்க அவர் அடித்து விரட்டியதை...
காசர்கோடில் ‘இந்த ஷாட்ல சிஷ்யர்கள் அத்தனை பேரையும் பேக்ட்ராப்பா வச்சு கம்போஸ் பண்ணு மது.. டே தொரை கூடப்போ... பிரகாஸா காமிராப்பக்கம் திரும்புனதும் ஸ்டார்ட் சொல்லு... சங்கரன் எழுந்து காமிராவை நோக்கி வரவும் கட்சொல்லு’ தைரியம் கொடுத்து செகண்ட் ஷெட்யூலிலேயே ‘ஸ்டார்ட் கட்’ சொல்லி யூனிட்டையே ஒப்படைத்ததை... இந்தியாவில் ஓடும் அத்தனை நதிகளிலும் குளித்ததை... பத்ரிநாத், கேதரிநாத்... இதையெல்லாம் எப்படிம்மா வார்த்தையில் சொல்வேன்?
கமலஹாசன் நடிக்கலியா... ஸ்ரீதேவி அப்புறம் ஹீரோயாரு சிவகுமாரா என்று கேட்கப் போகும் பக்கத்து வீட்டாருக்கு கிரிஷ்கர்னாடையும், காரந்தையும் சொன்னால் சிரிப்பார்களா...
பூரித்துப் புறப்பட்ட மனதில் ஏகப்பட்ட கேள்விகள். அப்பா பரவாயில்லே ஏதோ சினிமாவிலிருக்கிறான் என்ற வகையில் சந்தோஷப்பட்டுக் கொள்வார்.
பஸ் சாத்தூரில் நின்றதுமே ஸோல்னா பையை மேலிருந்து கீழிறக்கி தோளில் மாட்டிக்கொண்டான்.
சங்கரன் சிலையை லேசாக வெளித்தெரிய மேலே வைத்து ஜீன்ஸை அடியில் வைத்தான்.
ஊருக்குள் பஸ் நுழையும் போதே, மேற்கே கதிரேசன் மலை தெரிந்தது.
செல்வி ஜெயிச்சுட்டேன் செல்வி ஜெயிச்சுட்டேன்... “கல்யாணம் பண்ணணும்னு ஆசைப்படறவன் கதை எழுதிக்கிட்டு திரியக்கூடாது. அவஞ் சம்பாதிச்ச காசுல ஒரு முழம் பூ. ஒரு சினிமாவுக்காவது கூட்டிட்டுப்போக வக்கிருக்கணும்” உங்க அப்பாவை, வேலையத்தவன்னு பாத்த இந்த ஊரை ஜெயிச்சுட்டேன்.
ஜெர்மன்ல பார்ப்பான்.. அமெரிக்காவுல பார்ப்பான்.. என் பேர் உலகத்துக்கே தெரியும்
மனசுக்குள் சந்தோஷம் நிரம்பியிருந்தது.
பஸ்ஸ்டாண்டிற்குள் நுழைந்து பஸ் நின்றது.
இறங்கியதும் பஸ்ஸ்டாண்டு சுவர்க்கடிகாரம் பார்த்தான். மணி எட்டு. பின் பாக்கெட்டிலிருந்து சீப்பை எடுத்து தலையையும் தாடியையும் சீவி சரி செய்து கொண்டு வீடு நோக்கி நடந்தான்.
சந்தில் நுழைந்ததுமே வாசல் தெளித்தபடி மாரியக்கா எதிர்ப்பட்டாள்.
“யாரு தொரையா... என்ன இப்படி சாமியார் மாதிரி தாடியும் மீசையுமாயிருக்க.. மெட்ராசுக்கு போயி எத்தனை வருஷமாச்சு. அம்மாவுக்கு ஒரு லெட்டராவது போடக்கூடாது.. இப்பிடியா இத்தனை வருஷம் பேசாமயிருப்ப.. அம்மா இப்ப வீடு மாத்திட்டாகள்ள..”
வீடு மாற்றமா.. மூன்று தலைமுறையாக வாழ்ந்த சொந்த வீட்டிலிருந்து வேறு வீடா.. மனங்கலங்கியது.
“இதை வித்துட்டு.. சரஸ்வதி தியேட்டருக்குப் பின்னாலே உடையம்மா பாட்டி வீட்டுல வாடகைக்கு இருக்காக.. இப்ப நாந்தான் இதுல குடியிருக்கேன்.. வந்துட்டு அப்படி நிக்க.. இரு காப்பி குடிச்சுட்டு போகலாம்..”
“வேண்டாக்கா.. நான் வீட்டுக்குப் போய்ட்டு அப்புறமா வர்றேன்.”
சொல்லிவிட்டு நடந்தவனுக்கு சொந்தவீடு பறிபோயிற்றென்பதே தெருவில் நடக்கக் கூசிற்று.
சின்னவீடு. தகரம்பதித்த கதவு. தள்ளினான்.
“ஏ யப்பா தொரையா சித்தி.. தம்பி வந்திருக்கான்”
பேச்சியம்மக்கா குரல் கொடுத்தாள்.
கையில் காப்பி டம்ளரோடு வந்த அம்மா வா! என்று ஒற்றைச் சொல்லில் வீட்டுக்குள் அழைத்தாள்.
அவனுக்கு இடிவிழுந்தது போல மனசு திக்கென்றிருந்தது. மூன்று வீடு வாடகைக்கு விட்டு அவ்வளவு பெரிய வீட்டில் பார்த்த அம்மா அடுப்பும் இருப்பும் படுக்கையுமான ஒரே பத்தி வீட்டில் அவனுக்கு எது பேசவும் நா எழவில்லை.
காப்பி டம்ளரை வைத்தவள்
“என்ன திடுதிப்புனு வந்துட்டே... உங்கப்பாவும் நானும் உயிரோட இருக்கமா செத்துட்டோமான்னு பாத்துட்டு போக வந்தீயா” அதற்குமேல் பேசமாட்டாமல் சேலை முந்தானை எடுத்து முகம் புதைத்து அழுதாள்,
மாதா நாஸ்தி
பிதா நாஸ்தி
நாஸ்தி பந்து சகோதரஹா
அர்த்தம் நாஸ்தி
கிரஹம் நாஸ்தி
சம்பந்தமில்லாமல் வரிவரியாய் ஆதிசங்கரர் படப்பாடல் மனசுள் ஓடியது.
“யாரு தொரையா நீ எப்ப வந்தே?”
ஈரவேட்டி காயவிட்டபடி எங்கோ போய் குளித்துவிட்டு வந்த அப்பா வாசலில் நின்றபடி கேட்டார்.
“இப்பத்தான்”
அப்பாவின் நொடிந்த தேகம். அம்மாவின் இற்றுப் போன கம்பீரம் எல்லாம் விளங்கிவிட எங்கேயாவது வெளியே போய்விட்டு வந்தால் தேவலாம் போலிருந்தது.
ஸோல்னாப்பையை ஓரம் ஒதுக்கி வைத்துவிட்டு காப்பியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு வெளியேற எழுந்தேன்.
“இதுதான் உந்துணிமணியா?” அப்பா ஸோல்னாபை பார்த்துக் கேட்டார்.
“ஆமா...”
”வர்றது வர்றீயலே.. நல்ல துணிமணியோட வரக்கூடாதா.. நாங்கயிருக்கிற கோலம் போதாதுன்னு நீ வேற இப்படி சந்நியாசி மாதிரி ஜிப்பாவும் தாடியுமா வந்தியாக்கும். வெளியே போறதுன்னா இதையெல்லாம் கழட்டிப் போட்டுட்டு உங்கண்ணன் சட்டையொண்ணு பெட்டியிலேயிருக்கு. அதை போட்டுக்கிட்டு வேட்டியக் கட்டிக்கிட்டு போ.. மொதல்ல இந்த தாடியச்செர...”
ஜீன்ஸையும் ஜிப்பாவையும் கழற்றி கொடியில் போட்டுவிட்டு வேட்டி சட்டையை மாட்டிக் கொண்டு வெளியேறினான்.
தெருத்திருப்ப டீக்கடையிலேயே சமயவேலை பார்த்துவிட்டான். டீ குடித்து சிகரெட்டோடு நண்பனறைக்குப் போனான்.
இவன் குடும்பம் ஏன் இப்படியானதெனக் கேட்க, அவன் அதைவிடு.. படம் எக்ஸ்பீரியன்ஸ் எப்படியிருந்திச்சு என்றான் பதிலாய்.
கிட்டத்தட்ட இவன் மாநிலவாரியாக ஷெட்யூல் வாரியாக எடுத்ததை பார்த்ததை சொல்லிமுடிக்க மணி பனிரெண்டானது.
அவனறையிலே குளித்து வீடு போனான். திண்ணையில் உட்கார்ந்தான்.
வீட்டுக்குள் பெரிய பெரிய இரண்டு சூட்கேஸ்கள் இருந்தன. தண்ணீர்க் குடத்தோடு வந்த அம்மா, ”என்ன இங்கண உக்காந்துட்ட.. உங்கண்ணன் மச்சினன்மார் ரெண்டு பேரும் துபாய்லேர்ந்து வந்துருக்காங்க. அவுங்க சூட்கேஸ்தான் அது. அவுக தங்கச்சிமார்களை கூட்டிட்டு வர காரெடுத்துப் போயிருக்காங்க. ஒனக்கப்புறந்தான் அவங்களும் ஊரவிட்டு போனாங்க” பேசியபடி வீட்டுக்குள் போய் குடத்தை வைத்து விட்டுச் சாப்பிடத் தட்டெடுத்து வைத்தாள்.
இவன் சாப்பிட்டான்.
”வாங்க மாமா எப்ப வந்தீக”
என்றபடி துபாய் ரிட்டர்ன் மச்சினன்மார் இருவரும் வந்தனர்.
பளபளா சட்டை, ஃபாரின் வாட்ச், கழுத்தில் தடிதடியான செயின்கள். புது மெருகோடிருந்தன எல்லாமே.
அண்டைவீடு அயல்வீடு மச்சினரின் அக்கா தங்கைகள் என வீடு நிறைய ஆளாக.
இவன் ஆளாளுக்கு ஒரு வார்த்தை பதிலை உதிர்த்துவிட்டு நண்பன் அறைக்குப் போனான்.
”எனக்கு டூட்டி.. நீ வேணா இரு”
என்று சாவி கொடுத்துவிட்டுப் போனான்.
பாய்விரித்துப் போட்ட புத்தகம் தேடினான். சிகரெட் பாக்கெட் கூடவே பொட்டலமிருந்தது.
சிகரெட்டில் நிறைந்தான், நிறைய புகையை உள்ளிழுத்தான்.
ஆகாஸ பதிதந் தோயம்
ஸாகரம் பிரதி கஸ்ஸதி
புனரபி ஜனனம்
புனரபி மரணம்
பிக்ஷாந்தேகி க்ருபா வளம் பனகிரி
மாதன்ன பூர்ணேஸ்வரி..
அகம் பிரம்மாஸ்மி அகம் பிரம்மாஸ்மி
அகம் பிரம்மாஸ்மி.. அகம் பிரம்மாஸ்மி
சுதேசோ புவனேத்ரேயம்
எத்ராசம் கிரஹாவயம்
காலடி இருஞ்ஞாலக்கூடா சத்யம் நம்புதிரிகள் மாடம் பூ குஞ்சுக் குட்டனின் பிருஷ்டம்.. கிருஷ்ணன்ட அம்பலம்.. சிருங்கேரி நவராத்திரி விழா காணவந்த ஆப்ஸாரிபணியாத இளம் பெண்கள்.. உடுகா உடுகா சிக்கலா தா பின்னணியில் அதிகாலை நர்மதையில் நீர் சுமந்து போகும் பெண்கள்.. திரிவேணி சங்கமம்.. டாக்டர் பேனர்ஜியின் பிரமாண்டமான விருந்து.. சரஸ்வதியே போன்ற அந்த டெல்லி மாடர்ன் ஆர்டிஸ்டின் மனைவி.. பனிமலைகளில் காற்றில் பறந்து வந்த ஐஸ்கட்டிகளை நடிக்க வந்த பெண்கள் மீது போட்ட தோடகச்சாரி மட சாமியார். இரவிலே காணாமல் போய் இரவெல்லாம்தேடியும் கிடைக்காமல் யூனிட் அயர..
பத்ரிநாத்தில் வேறொரு குஷ்புக்கு பிறந்த குழந்தை.. அதை அப்படியே விட்டு விட்டு யூனிட்டோடு புறப்பட்ட விந்தை. பிறந்தவன் சங்கரனா? புத்தனா.. துபாய் ரோலர் சூட்கேஸ்கள்.
ஓயாத நினைவலைகளின் ஓவர்லாப்பில் அயர்ந்து தூங்கிப் போய் எழுந்தபோது இருட்டியிருந்தது.
தலை கனக்கிற மாதிரியிருக்க, எழுந்து வேட்டி சட்டையைச் சரிபண்ணியபடி வீட்டுக்குப் போனான்.
அண்ணி கையில் ஒரு பாரின் நெக்லஸ். அண்ணியின் அக்கா கையில் ஹேண்ட்பாக். குழந்தைகள் கைகளில் டீசர்ட்டுமாய் வைத்து பார்த்துக் கொண்டிருக்க ஒரே அமளியாயிருந்தது.
இவன் திண்ணையிலமர்ந்தவன் அப்படியே தூங்கிப் போனான்.
அம்மா எழுப்பி சோறு வைத்துக் கொடுத்தாள். இவன் சாப்பாட்டுத் தட்டு முன் சும்மா இருக்க சோறு உருட்டிக் கையில் கொடுக்க கொடுக்க சாப்பிட்டான்.
தனது ஜோல்னாபையில் வைத்திருந்த அமர்ந்த நிலை கொண்ட சங்கரன் சிலையை அம்மாவிடம் காட்டலாமா என்று நினைத்தவன், காட்டாமலே தூங்கிப்போனான்.
மாலையில் எழுந்து நண்பன் எடுத்து வைத்திருந்த டிக்கெட்டோடு பஸ் ஏறினான். பஸ் ஊரைவிட்டு அவுட்டர் வந்ததும் கண்டக்டர் இவனைப் பார்த்து ”அதென்ன லக்கேஜா? சீட்ல வைக்காதீங்க.. இப்ப ஆள் ஏறும். எடுத்து மேலே வைங்க” என்றார்.
இவன் பதிலேதும் சொல்லாமல் அவர் சொன்னபடி செய்தான்.

Wednesday, October 13, 2010

ஸ்ரீ அன்னை சொல்

உண்மையான தேவைக்கும் ஆசைக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.


உன்னுள் எதாவது ஒன்று ஒரு சிறு திவிரமான அதிர்வை உண்டாக்குகிறதென்றால் அங்கே ஆசையிருப்பதை நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம்.

தேவையா ஆசையா என்று கண்டுபிடிக்க உன்னை மிக உன்னிப்பாகக் கவனித்து இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும் “இந்தப் பொருள் கிடைக்காவிட்டால் என்ன நேரும்?” அதற்கு உடனடியாக, நிலைமை மோசமாகிவிடும் என்ற பதில் வந்தால் அது ஆசை என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம்.

ஓர் ஆசையை திருப்தி செய்வதில் பெறுவதைவிட அதை வெல்வதால் அதிக மகிழ்ச்சி பெறுகிறோம் என்று புத்தர் சொல்லியிருக்கிறார்.

திருப்தி செய்யப்படும்போது கசப்புணர்வைத் தராத ஆசையே இல்லை. இதுவே உண்மை. நீ மனப்பூர்வமாக முயன்றுபார்.

* நீ உனக்கே செய்து கொள்ள முடியாத நன்மையை உன்னால் பிறருக்குச் செய்ய முடியாது.

* யாரிடத்திலாவது ஒரு குறை இருக்கக் கண்டால் உன்னிடமும் அது இருக்கிறது என்பதை நீ நிச்சயமாகத் தெரிந்து கொண்டு, அதை மாற்றத் தொடங்கு. அதை மாற்றிவிட்டபோது பிறரிடத்திலும் அதைமாற்றுவதற்கு வேண்டிய பலம் உன்னிடத்தில் இருக்கும்.

* ஆன்மீக வாழ்விற்கும் ஒழுக்கத்திற்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது ஆனால் சாதாரண மக்கள் இவை இரண்டையும் ஒன்றொடொன்று குழப்பி விடுகின்றனர்.

ஒழுக்கம், எல்லோரும் தனது ஒரே இலட்சியமாகிய அச்சில் வார்க்கப்பட வேண்டுமென்றும் எல்லாம் விலக்கின்றி ஒரே மாதிரியாகவும் ஒரே விதமாகவும் செய்யப்பட வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றது.

ஒழுக்கம் தனது இவ்வளவு இறுகியதாகவும் உண்மைக்கு மாறுப்பட்டதாகவும் இருப்பதால் அது தனது கொள்கையிலும் நடைமுறையிலும் ஆன்மீக வாழ்விற்கு நேர் எதிராக உள்ளது.

ஆன்மீக வாழ்க்கையானது எல்லோரிடமும் சாரமாக உள்ள ஒரே மெய்ப்பொருளை வெளிப்படுத்துகிறது என்பது உண்மையே, ஆனாலும் அது அம்மெய்ப்பொருளின் முடிவற்ற வேறுபாடுகளை காட்டுகிறது. ஒருமையிலுள்ள பன்மைக்காகவும், அப்பன்மையின் பூரணத்திற்காகவும் வேலை செய்கிறது.

ஒழுக்கமோ வாழ்க்கையில் காணப்படும் வேற்றுமைக்கும், ஆன்மாவின் சுதந்திரத்திற்கும் நேர் விரோதமாயுள்ள ஒரு கற்பனை பிரமாணத்தை நாட்டுகிறது.

வளர்ச்சிக்கு இடமில்லாத வரம்புடைய ஒன்றை மனதால் கிருஷ்டித்துக் கொண்டு அதன்படி ஒழுக வேண்டுமென்று கேட்கிறது.

எல்லோரும் ஒரே விதமான குணநலன்களையும் ஒரே லட்சிய சுபாவத்தை பெறுவதற்கு எல்லோரும் உழைக்க வேண்டும் என்று கூறுகிறது.

ஒழுக்கம், மனிதனால் உருவாக்கப்பட்டது. மனிதத்தன்மை கொண்டது.

நன்மை, தீமை என்னும் மாறாத பிரிவினையை மூலாம்சமாகக் கொண்டது. ஆனால் இது யதேச்சையான பாவணையாகும்.

வரம்புடைய விஷயங்களை எடுத்துக் கொண்டு வரம்பற்றவை போலத் திணிக்கிறது.

ஏனெனில் நன்மை, தீமை என்பவை வெவ்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கும், காலங்களுக்கும், நாடுகளுக்கும் ஏற்ப மாறுகின்றன.

சன்மார்க்க நெறிகள் ஆசைகளை நல்ல ஆசைகள், கெட்ட ஆசைகள் என்று பாகுபடுத்தி நல்ல ஆசைகளை மேற்கொள்ள வற்புறுத்துகிறது.

ஆனால் ஆன்மீக வாழ்க்கையோ ஆசைகளை அடியோடு விலக்கிவிட வேண்டுமெனக் கோருகிறது.

ஒழுக்கநெறி முற்றிலும் செயற்கையானது. கண்மூடித்தனமாக வற்புறுத்தப்படுகிறது. மிகச்சிறந்தவர்களுள் பெரும்பான்மையினர் விஷயத்தில் நான் சரியான பாதையில் செல்கிறேன். நான் ஒரு நாகரீக மனிதனாக நடந்து கொள்கிறேன். எல்லா வாழ்க்கை அறங்களையும் கடைப்பிடிக்கிறேன் என்பது போன்ற திருப்தியை அது கொடுப்பதனால் அவர்களுடைய உண்மையான முயற்சிக்கு அது தடையாக அமைகிறது. இவ்வாறு அவர்களுக்கு தங்களைப் பற்றி ஒரு திருப்தி ஏற்பட்டுவிடுவதால் அவர்கள் முன்னேறுவதில்லை. அதற்காக முயற்சி செய்வதும் இல்லை.

ஒழுக்க சீலனான ஒரு மனிதன் இறைவனை அடையும் பாதையில் செல்வது, மிகவும் அரிது.

Tuesday, October 12, 2010

சௌபர்னிகாவின் நீண்ட கூந்தல் சிறுகதை

முற்றத்தில், வீட்டுக்குள், படுக்கையில் தெருவில், தோளில், திசைக்கொரு குதிரை கால் உதறிப் புறப்படத் தயாராக வீரனின் கால் தட்டலுக்கு காத்துக் கிடக்கும்.

புல் மட்டும் இல்லாது சாராயநெடி மறவாத குதிரைகள். காப்பிலிங்கப்பட்டியில் மரப் பட்டை சாராயமாக ருசி மாறும் போதே குதிரைகளின் கனைப்பும் அதிரும். காளியின் மகன் அவன். பீடத்தின் பின்னே கார் ட்யூப்களில் தளதளக்கும். சாராயம், கிளாஸ், கிளாசாக பின் யார் வாய்க்கோ.

சங்குமார்க் லுங்கியும், வெளேர் சட்டையிலும் வரிச்சியாய் மினுக்கும் திரேகம் குதிரை வீரனுக்கு. இடைவாரில் நீண்ட அரிவாள் தொங்கும். எந்த வேலையிலும் பச்சைரத்தம் பார்க்கதுடித்தபடி குலவைகளில் காளியோடு அவனும் குதூகலிப்பான்.

வீடற்று வந்தவனைக் காளிதான் தத்தெடுத்து தனது காலடியில் இருக்க வைத்துக்கொண்டாள். வட்டாரச் சண்டியர்கள் எல்லாம் சில்வர் தம்பளர்களில் காளியின் காலடியில் சாராயம் பருகி அருள்பெற்று பலமாகி ரத்தம் பார்த்தார்கள். காக்கி சட்டைகளைக் காலடியில் போட்டு கசக்கிச் சிரித்தார்கள். சாதி மதபேதமற்று சண்டியர்களின் அரிவாள்களுக்குள் பூமணமாய் கசிந்திருந்தது பாசம் ஜாக்கிரதை உணர்வோடு.

தூக்கக் கலக்கத்தில் சடேலென எழுந்து தலையணைக்கு அடியிலிருந்து அரிவாள் எடுத்து ஒன்றுக்கு போனான் குதிரை வீரன் ஒற்றையாக பூனையின் பீதியோடு காலடி எடுத்து வைத்து.

சரவிளக்குகளின் வெளிச்சத்தில் அந்தக் கூடாரத்தில் நெற்றியில் சந்தனக் கீற்றோடு நின்றாள் சௌபர்னிகா.

குதிரை வீரன் வளையங்களை வாங்கி வாங்கி வீசியெறிந்தான்.

வளையங்களில் எதுவும் சிக்கவில்லை. சௌபர்னிக்காவை இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

சௌபர்னிகாவின் நீண்ட கூந்தலை முகம் அள்ளிப் பூசிக் கொண்டான். மாரில் ஏந்திக் கொண்டான். கால்தொடும் கூந்தலை நடக்கவிட்டு ரசித்தான். அரிவாள் அந்த நாட்களில் எரவாணத்தில் ஓய்வு கொண்டது.

அவளது கூந்தல் நீண்டு நீண்டு தெரு தாண்டி பல ஊர்களில் எட்டிப் பார்த்தது. ஜனங்களின் பேசுபொருளில் சௌபர்னிகாவின் நீண்ட கூந்தல் சிக்கு எடுக்கப்பட்டது.

இளவட்டக்கல் தூக்கி எறிந்தவன் காதில் சௌபர்னிகாவின் கூந்தல் நீண்டு குறுகுறுத்தது. ஜன்னல் வழியே அவள் கூந்தல் உலர்த்துவதைக் கண்டு ஸ்கலிதமடைந்தான். மீண்டும் மீண்டும் நீண்ட கூந்தல் கண்டு ஸ்கலிதமடைந்தான்.

வேட்டைக்குப் போன குதிரை வீரன் ஜன்னலோரம் கூந்தல் உலர்த்துவதறிந்து திரும்பி வந்தான். பரணில் ஏறி பதுங்கினான்.

ஜன்னலோரம் கருமேகமாய்த் திரண்டது சௌபர்னிகாவின் கூந்தல். இளந்தாரியின் கண்ணில் சூர்ய பிரகாசம். எட்டி உதைத்தான் குதிரையை எரவாணத்து அரிவாளை எடுத்து இடுப்பில் சொருகினான்.

இளந்தாரியின் தாட்டிக்கம் தயக்கம் விளைவித்தது.

செங்கோட்டை சென்று தாழம்பூ வாங்கி வந்தான் தாதி மார்களை விட்டு சௌபர்னிகாவின் கூந்தலில் தாழம்பூ தைக்கச் சொன்னான்.

நீண்ட கூந்தலை விரித்து தூங்கினான். மார் வியர்வை அள்ளி துடைத்தான். ஏகாந்தமாய் தூங்கி விழித்தான் பரவசத்தோடு.

குளித்து நுனி முடிச்சிட்ட அவளது நீண்ட கூந்தல் ஜன்னலோரம் மேகமாய் கருத்திருந்தது.

அரிவாளின் கூர்பார்க்க சுண்டு விரல் தீட்டி ரத்தம் ருசித்தான் சாராயம். நுரைத்து நெஞ்சில் கனல் பறந்தது.

இடக்கையால் நீண்ட கூந்தலை அள்ளினான். தாழம்பூ வாசனை கிறுகிறுத்தது. மூச்சிழுத்து அரிவாளால் கொற கொற வென அறுத்தான்.

பல்லக்கில் நீண்ட கூந்தலை மடி ஏந்தி ஊர்வலமாக போய் மயானத்தில் எரித்தான்.

பதினெட்டு பட்டிக்கும் தாழம்பூ கூந்தல் வாசனை பரவி பேச்சானது.

வீடு திரும்பினான் குதிரை லாயம் காலியாக இருந்தது.

அவன் ஓங்கி குரலெடுத்து வாய்விட்டு அழுதான் கண்ணீர் ஆறாய் பெருகி பதினெட்டு பட்டிகளிலும் தாழம்பூ வாசமோடு பரவியது.

ஓஷோ: அன்பு ரோஜா

ஓஷோ: அன்பு ரோஜா
அன்பு என்பது எப்போதும் மிக ஆழமானது,மலரும் தன்மையுடையது.அது முழுமையில் கலக்கும் அற்புதக்கலை. யாரும் ,யாருக்காகவும் இல்லை.உள்ளுக்குள் தனி விருப்பு வெறுப்புகள் உண்டு,மற்றவர்க்கும் அதே.
தனிமையை நாம் விரும்புவதில்லை,அதில் வெறுப்பும் விரக்தியும் உணர்கிறீர்கள்.ஆனால் தனியாக loneliness சுற்றித்திரிவது தனிமையாகாது aloneness .அது பிரக்ஞை நிலையில் உச்சத்தன்மையில் இருப்பதாகும்.அந்த நிலையில் பரவும் அன்பு கொண்டாட்டமானது உங்கள் அனபை,உங்கள் பாட்டை,உங்கள் இசையை,உங்கள் ஆட்லை மற்றும் இந்த அழகிய மரங்களை,வெகுளி நிறைந்த அந்த பறவைகளின் ஒலியை,இரவில் தெரியும் நட்சத்திரங்களை இப்படி எல்லாவற்றையும் உணர்வுபூர்வமாக கொண்டாடுங்கள் பிறரோடு உண்மையாகப் பங்கிடுவது எதுவென்றால்,உங்கள் ஆழ்ந்த அமைதி,ஆனந்தம் மற்றும் கொண்டாட்டம்தான்.அப்பொழுது உங்கள் இதயம் மெல்ல மெல்ல உருகி,மற்றவர்களோடு ஒன்று கலக்கும் .அப்பொழுது உங்கள்
அன்பு ஆத்மிகமாக மாறுகிறது
- ஓஷோ

ஓஷோ: அன்பு ரோஜா

ஓஷோ: அன்பு ரோஜா

Monday, October 11, 2010

நோபல் பரிசு பெற்ற நாவல் தமிழில்..

‘மதகுரு’ செல்மா லாகர்வெல் என்ற ஸ்விடிஸ் எழுத்தாளர் எழுதி 1891ல் வெளியான நாவல் 1909ல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. 1956ல் க.நா.சு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட இந்த நூலை, மருதாபதிப்பகம் பாலகுரு கடந்த ஆண்டு நேர்த்தியான அட்டை வடிவமைப்போடு கொண்டு வந்திருப்பதற்கு தமிழ் இலக்கிய உலகம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. இதே மறைந்த இலக்கிய மகான் க.நா.சு. எழுதிய முன்னுரையிலிருந்து........

1931ல் கல்கத்தாவில் இம்பீரியல் லைப்ரரியில், என்னுடைய பத்தொன்பதாவது வயதில், நான் முதன்முதலாக இந்தக் கெஸ்டா பெர்லிங் ஸாகாவைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து வருஷங்களில் நான் இதை, ஆதிமுதல் அந்தம்வரை, ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்போதும் மொழிபெயர்க்க உட்காரும் போதுகூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால், தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலு பக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது.

படிக்கும்தோறும் படிக்கும்தோறும் இந்த நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிதுபுதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் எனக்குத் தோன்றுகின்றன. செல்மா லாகர்லெவ் என்கிற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்கைப் படித்து முடிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக்கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் கெஸ்டா பெர்லிங்கும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்.

கெஸ்டா பெரிலிங்க்கு ஈடான வேறு நூல் உலக இலக்கியத்திலேயே மிகவும் சிலவேதான் இருக்கின்றன என்றே கருதுகிறேன். இந்தியாவின் இதிஹாஸங்களான ராமாயணமும், மஹாபாரதமும், கிரேக்க பாஷையின் காவியங்களான இலியாதும் ஓடிஸியும், இத்தாலிய டாண்டேயின் தெய்வநாடகமும், ஜப்பானின் நாவல் லேடி முரஸாகி, ஸ்பெயின் தேசத்து டான் க்விஜோட், ஆங்கிலேயரின் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இவற்றையே இந்த நாவலுக்கு ஈடாகச் சொல்லமுடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன நூல்களிலுள்ள ஒரு பூரணத்வம் என்கிற தன்மைகளை இந்தக் காலத்திய எழுத்துகளில் காணக்கிடைப்பது அரிதாக இருக்கிறது. இந்த மாதிரியான பூர்ணத்துவம், கெஸ்டா பெர்லிங் ஸாகாவில் இருப்பது, அதைத் தனி ஒரு சிகரமாக உயர்த்துகிறது என்று சொல்லத் தோன்றுகிறது.

கதை சொல்வதில் செல்மா லாகர்லெவின் பாணி அலாதியானது, கலையை, மணக்கும் ஒரு கலையுடன், எளிய உதாரணங்களுடன், கவித்வம் நிறைந்த வார்த்தைகளைக் கொட்டி ஒரு சம்பவத்தை உருவகப்படுத்துகிறாள். இந்தமாதிரிக் கதை எழுதியவர்கள், காவியம் எழுதிய கவிகளைத் தவிர, வேறு யாருமில்லை என்று தைரியமாகக் கூறலாம்.

*கையில் எடுத்தும் இரண்டு அத்தியாயங்கள் (35 பக்கங்கள்) படித்து முடித்து விட்டேன். அத்தனை எளிய, ருசிகரமான நடை, க.நா.சு மகான் தான். இதுகுறித்து பாலகுருவிடம் தொடர்பு கொள்ள:9500061608

வேறு வேறு

நீங்களும் குடிக்கிறீர்கள் தான்

இருப்பினும்

நீங்களும் நானும்

ஒரே போல குடிகாரர்களில்லை



வாழ்தலின்

சந்தோஷத்திற்காக

சலிப்பை போக்க

நீங்கள் குடிக்கலாம்



தீராத் துயரத்தை

துடைக்க முடியாத அழுக்கை

உடலெனும் சுமையை குறைக்க

குடிக்கிறேன், நான்



குடிக்காமலே

மனிதனாக வாழவும்

முடிகிற கொஞ்சம்பேர்கள்

ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்



எப்போதும் காய்நகர்த்தல்

வெற்றி வெற்றி

என்றொடும்

எந்தக் குதிரையையும்

எதிர் கொண்டு விடாமல்

பயமுறுத்துகிறது

வெறுமை



குடிப்பது பாவம் குற்றம்

கேவலம் இழிசெயல்

என்பதெல்லாம்

கடந்து போயிற்றுகாலத்தில்



குடிப்பதின் நோக்கம்

குடிப்பதாக மட்டுமே இருந்தால்

குழப்பத்திற்கிடமில்லை



‘ஓடும் நீருக்கும் உள்ள

உள்ளோட்டம்’

தள்ளாட்டம்

தடுமாற்றம்



நீங்களும் நானும்

குடித்தாலும்

ஒரேபோல குடிகாரர்களில்லை

நாம்.



                                                                                                          - வித்யாஷங்கர்

‘மதகுரு’ நூல் வெளியீட்டாளர் பாலகுருவுக்கு.

Wednesday, October 6, 2010

கவிதலையருவி

கேரளத்து பகவதியின்
அருள் பெருக்கு
அருவியாய்
தாரை தாரையாய்
பொங்கி வழிகிறாள்
வேர் மண் நனைக்க

அகத்தியன் அமர்ந்து
தவசிருந்த அகண்டபாறை நிறைத்து
பெருகிப் பரவுகிறது
சித்தம் போக்கில்
கற்களை சிற்பமாக்கி

சங்கிலி பூதத்தான்
கட்டளைக் கிணங்க
மேகங்கள் குவிந்து
குதித்துப் பெருகுகின்றன
பேரருவியாய்
ஆனந்தப் பேரோசையோடு

பாண்டி மாதேவி
பசியார அள்ளிப்பருகிய நீர்
கைமணத்தோடு பெருகி
மேனி சிலிர்க்க
தோல் துளைத்து
உள் இறங்குகிறது
தாய் ஈரம்

தலை தட்டி
தோள் நழுவி
மயிர்க்கால்கள் சிலிர்ப்புற
வாய் பிதற்ற
அடி வயிற்றில்
அருவியின் நர்ந்தனம்

ஹே மாதா மூதாதையரே
வன தேவதா
வாட்களின் மோதல்
இரைச்சல் கேட்டு ஓய்ந்த
ரத்தம் கழுவிய
மூல அருவியே
மூச்சிரைக்க
பரவசத்தில்
பிதற்றுகிறான்
ஏழாம் தலைமுறை

துள்ளிக் குதித்தும்
தொடர் ஓட்டம் ஓடியும்
தவழ்ந்து பெருகியும்
தடாலென அறைந்தும்
ஆசிர்வதிக்கிறாள்
கவிதலையருவி
தலை தடவி

வரிசையாய்
யானைகள் இழுக்க
வன புத்திரர்கள்
மலை கடந்து
நதி கடந்து
வேரிழந்து
லாரிகளில் ஏற்றப்படுகிறார்கள்

கவிதலையருவி
வம்சவிருட்சம்
சிதையாமல்
வேரில் பாய்ந்து
உயிரூட்டுகிறாள்
வெட்டும் கோடாரிக்காரன்
தாகம் தணித்து...

வித்யாஷங்கர்

(கவிதலையருவி பாபநாசம் அணையிலிருந்து மலைமேல் 7வது கிலோமீட்டரில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமான எஸ்டேட்டில் உள்ளது. என்னை அழைத்துச் சென்று தனித்து அருவியில் பொங்கிப் பெருகி நனைய வைத்து புலாலும் மதுவும் போதும்போதுமென அருவியிலேயே கிடைக்கும்படி  வந்து ஊட்டி மகிழ்வித்த முரளியின் அன்பிற்கு)

ஒரு காதல் கவிதை

விரி இதழ் தோறும்
மழைத்துளிகள் ஏந்தி
நின்றது ரோஜா

இருவரும் அருகே சென்றனர்

மழையின் கிளர்ச்சியில்
ரோஜா சிரிப்பென்றான்
அவன்

குளிரின் நடுக்கத்தில்
வெளியான
ரோஜா கண்ணீரென்றால்
அவள்

சற்று நேர
கனத்த அமைதிக்குப்பின்

வெவ்வேறு திசை நோக்கிச் செல்லும்
பேருந்துகளில்
இருவரும் பயணித்தனர்
தத்தம் வீடு நோக்கி
ரோஜா மறந்து

Tuesday, October 5, 2010

யோகியின் கதை

பரமஹம்ஸ யோகனந்தரின் ஒரு யோகியின் புத்தகம் இந்திய ஆன்மீக உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது.

இதை ஒரு புத்தகம் என்று மட்டும் கூறிவிட முடியாது. ஆன்மீகப் பெட்டகம்.

நவீன யுகத்தின் உபநிஷத் என்று பலர் போற்றியிருக்கிறார்கள்.

ரஜினியின் பாபா படத்தில் பட்டத்தை மந்திரத்தால் வரவழைப்பது போன்ற பல காட்சிகள் இதிலிருந்து எடுத்துக் கையாளப்பட்டிருக்கிறது மென்னையாக ரஜினி சாருக்கும், எஸ். ராமகிருஷ்ணனுக்கும் இருந்த ஆன்மீக வேட்கை அப்படி.

வடகிழக்கு இந்தியாவில் சோரக்பூரில் 1893ம் ஆண்டு ஜனவரி 5ல் பிறந்து 1915ம் ஆண்டு சன்னியாசம் பெற்றவர்.

1952 மார்ச் 7ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்ஜிலீஸில் மகா சமாதியடைந்தார்.

மனது மற்றும் ஆன்மாவின் ஜன்னல்களைத் திறக்கும் புத்தகம் என்று இந்தியா ஜர்னல் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரமஹம்சர் தனது குரு யுக்தேஸ்வர் பற்றி குறிப்பிடும் போது அன்புடன் இருக்க வேண்டிய விஷயங்களில் மலரைவிட மென்மையாகவும் கொள்கைகள் தவறும் சமயங்களில் இடியைவிட வலிமையாகவும் இருந்தார் என்று குறிப்பிடுகிறார்.

சில மனிதர்கள் மற்றவர்கள் தலையை வெட்டுவதன் மூலம் உயரமாகி விடலாம் என்று நினைக்கிறார்கள் என்பது குருவாக்கியம்.

தயவு செய்து இமயத்திற்கு செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள். தடையற்ற தனிமையில் தொடர்ச்சியாக தெய்வீகத் தொடர்பை அடைய எண்ணுகிறேன் என்கிறார் பரமஹம்சர்.

பதிலாக குரு யுக்தேஸ்வர் “இமயமலையில் பல மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் கடவுள் தரிசனம் கிடைக்கவில்லை.

ஞானத்தை அசைவற்ற மலையிடம் இருந்து தெரிந்து கொள்வதைவிட, ஓர் ஆத்ம ஞானியிடம் இருந்து தெரிந்து கொள்வதுதான் மிகவும் நல்லது” என்கிறார்.

குருதேவர் தான் ஆசிரியரே தவிர ஒரு மலை அல்ல என்பதை அவர் தெளிவாக குறிப்பிட்டார்.

யோகி ராம் கோபால் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்தார்.

இளம் யோகியே நீ உன் குருதேவரிடமிருந்து ஓடிவந்திருப்பதைச் காண்கிறேன். உனக்கு வேண்டியதெல்லாம் அவரிடமே உள்ளன. நீ அவரிடமே திரும்ப வேண்டும். மலைகள் உன் குருவாக இருக்க முடியாது இரண்டு நாட்களுக்கு முன்பு யுக்தேஸ்வர் கூறிய அதே கருத்து.

மகான்கள் மலைகளில் மட்டும்தான் வசித்தாக வேண்டுமென்ற பிரபஞ்சக் கட்டாயம் எதுவும் இல்லை. இந்தியா மற்றும் திபெத்தில் உள்ள இமயமலைக்கு முனிவர்களின் மீது ஏகபோக உரிமை இல்லை. ஒருவன் தனக்குள்ளேயே உள்ளதை அறிவதற்கு சிரமப்படவில்லையெனில் உடலை அங்குமிங்கும் கொண்டு செல்வதனால் அதைக் கண்டு பிடித்துவிட முடியாது. பக்தன் ஞானத்தை அடைய உலகின் எல்லைகளுக்குக் கூடச் செல்வதற்கு எப்போது தயாராகிறானோ அப்போது அவனுடைய குரு அருகிலேயே பிரசன்னமாகிறார்

காசி ஆசிரமத்தில் என் பிரார்த்தனையைத் தொடர்ந்து நான் ஸ்ரீ யுக்தேஸ்வரை ஒரு நெரிசலான சந்தில் சந்தித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டு அவர் கூறியதை மௌனமாக ஒப்புக் கொண்டேன்.

ஓர் இடத்தில் கதவை மூடிக் கொண்டு தனிமையாக அமர்ந்து கொள்ள ஒரு சிறை அறை உனக்குள்ளதா?

ஆமாம். என்றேன்.

அதுதான் உன் குகை என்று கூறி அந்த யோகி என்மீது செலுத்திய ஒளி வீசிய பார்வையை நான் என்றுமே மறக்கவில்லை.

அதுதான் உன் புனிதமான மலை. அங்குதான் நீ இறைவனின் ராஜ்யத்தைக் காண்பாய்

அவரது எளிய சொற்கள் காலங்காலமாக என்னை ஆட்கொண்டிருந்த இமயமலை பற்றிய எண்ணத்தை அக்கணமே அழித்தது. கொதிக்கும் ஒரு நெல் வயலில் மலைகள் மற்றும் முடிவற்ற பனிச் சிகரங்கள் என்ற கனவிலிருந்து விழித்துக் கொண்டேன்.

(தொடரும்...)

அம்மா வாங்கித் தந்த லுங்கி

ஆடை வாங்கித் தருவதென்பது அன்புக்குரியவர்களை அழகுபடுத்திப் பார்ப்பது.

பிரியப்பட்ட சாமிகளுக்கு கூட பட்டு சார்த்துவது பழக்கத்தில் உள்ளது.

‘சரஸ்வதி பூஜையையொட்டி பிறந்த’ என்று அம்மா சொல்லியிருக்கிறார்.

80க்கு முன்பாக எனது பிறந்த தேதியே எதுவுவென்று தெரியாமல் தான் இருந்தேன். விக்ரமாதித்யன் தான் எனது ஜாதகக்குறிப்பை வாங்கிப்போய் சைதாப்பேட்டையில் எழுதிவந்தார். (தராசு வார இதழில் இருவரும் பணியாற்றிய காலம்)

நக்கீரன் கோபால்தான் ரெய்மாண்ட்ஸ் ஷோரூமிற்கு கூட்டிப்போய் அளவெடுத்து குர்தா செட் ஒரே நேரத்தில் மூன்று எடுத்து தந்தார். அதற்கேற்றாற் போல ரஜினி அணிகிற மாதிரி செருப்பும், எனது காலை வெள்ளை பேப்பரில் வரைந்து எடுத்துப் போய் கறுப்பு வெள்ளை என இரண்டு விதமாக எடுத்துவந்து தந்தார். இதுவரை அது எங்கு தயாரிக்கப்பட்டது என்பது தெரியாது.

பிறந்தநாளுக்கு பிறந்தநாள் தவறாமல் டிரெஸ் எடுத்து தருவது கோபாலின் வழக்கம்.

எழுத்தாள சகோதரர்கள் பாஸ்கர் சக்தியும், ரமேஷ் வைத்யாவும் சேர்ந்து விகடனிலிருக்கும் போது ஒரு பிறந்த நாளைக்கு சட்டை எடுத்து தந்தது, ஆபிஸ் முழுக்க பேச்சு.

இன்னொரு பிறந்தநாளில் சகபணியாளப் பெண் தோழி மும்பையிலிருந்து சட்டை வாங்கி வந்து தந்தார்.

மற்றொரு பிறந்தநாளில் வேறொரு தோழி என்னையே கூட்டிப்போய் தேர்வு செய்யச் சொல்லி சட்டை எடுத்துதந்தார். அவள் விகடனில் பணியாற்றிய போது முதல் ஜாலி டே நிகழ்ச்சிக்காக மதுரை போயிருந்தோம். நிகழ்ச்சிக்கு முதல் நாள் சௌபா என்கிற சௌந்திரபாண்டியன் (என் பிரியத்திற்குரிய சகா) முடப்போன ரெய்மாண்ஸ் கடையை திறந்துவைக்கச் சொல்லி இரவில் சட்டை ஒன்றை எடுத்துக் கொடுத்தார் விழாவுக்காக.

ஒரு பொங்கலுக்கு முதல் நாள் நானும் நம்பியண்ணனும் நன்றாக குடித்திருந்தோம். நான் அவரை காதிபவன் அழைத்துப்போய் கதர் ஜிப்பா எடுத்து கொடுத்தேன்.

சமீபத்தில் டெல்லியிலிருந்து வந்த பிரேம் (நம்பியண்ணாச்சியின் மூத்தமகன்) ‘சித்தப்பா இது அப்பாக்கு எடுத்துட்டு வந்தேன். உங்களுக்கு சரியா இருக்கும், நீங்க போட்டுக்குங்க’ என்று சர்ட் ஒன்றை கொடுத்தான்.

அம்மா வருட திதிக்காக போன வாரம் கோவில்பட்டி போய்விட்டு குற்றாலம் போவதற்காக நம்பியண்ணாச்சியை தென்காசியில் வீட்டில் போய் பார்த்தபோது ‘ஒரு பேன்ஷி டீ சர்ட் புதுசா இருக்கு நீங்க போட்டுக்குங்க’ என்று கொடுத்தார்.

குடியல், குளியலுக்குப்பின் அந்த பேன்ஷி டீ ஷர்ட்டோடு அண்ணாச்சியோடு படமும் எடுத்துக் கொண்டேன்.

கோவை செம்மொழி மாநாட்டுக்குச் செல்ல, இரண்டு கலரில் ஓவர் கோட் 4 டீசர்ட், 1 சர்ட் கூலிங்கிளாஸ் என பேக் நிறைய கொடுத்தனுப்பினார் டைரக்டர் ராஜேஸ்வர்.

வருடந்தோறும் (கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கும் மேலாக) தீபாவளிக்கு தீபாவளி ஜோதிடர் நெல்லை வசந்தன் (பால்ய சிநேகிதர், பள்ளித் தோழர்) எனக்கு எனது மனைவி, மகன், மகள் என எல்லோருக்கும் உடை எடுத்து தருவதை வழக்கமாக செய்து வருகிறார். இதேபோல எனது மரியாதைக்குரிய பெண்மணியும் தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்த பிறந்தநாளில் (வீட்டுக்கு அழைத்து பார்ட்டி காந்தி பிறந்தநாளில் வாங்கி வைத்திருந்து கொடுத்தது பெரும் வரப்பிரசாதம் தானே) பிராண்டட் ஷர்ட் ஒன்றை டைரக்டர் ராஜேஸ்வர் கொடுத்து வாழ்த்தினார்.

அம்மா, அப்பாவை இழந்து உறவுகளற்ற ஊரில் இருக்கும் எனக்கு அவரே எல்லாமாக இருக்கிறார். அவரது வாழ்த்து பெரும்பலம் தானே.

ஏதோ ஒரு தமிழ்படத்தில் ரவிச்சந்திரன் பூப்போட்ட லூங்கியும் ஜிப்பாவும் அணிந்து எழுத்தாளராக வருவார். அந்தப் படத்தைப் பார்த்து விட்டு தவணைக் கடையில் அம்மா வாரத்தவணையில் பணம் கட்டுவதாக வாங்கித் தந்த லுங்கி இன்னும் மனசில் நிழலாடுகிறது.

அம்மாவோ, அப்பாவோ அவர்களது பிறந்தநாளை நினைவு வைத்திருந்ததாகவோ குறைந்தபட்சம் கோவிலுக்கு போய்வந்ததாகவோ கூட கேள்விப்பட்டதில்லை.

Saturday, October 2, 2010

பிறந்த நாளும் பிஸ்கட் பாபா அனுபூதியும்

    இன்று எனது பிறந்த நாளையொட்டி காலையிலேயே தமிழ்நாடு ஊடக மற்றும் பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலாளர் ரிச்சர்ட் ஆனந்த், பொருளாளர் பாலாஜி பூச்செண்டு, ஸ்வீட் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர். நான் நண்பன் வாசுவுக்கு போன் செய்து பிஸ்கெட் பாபாவான வடபழனி பரஞ்ஜோதி பாபாவை பார்க்க வேண்டும் என்பதை தெரிவித்தேன். அவன் 9.30க்கு புறப்பட்டு வரும்போது திடீர் மழை விடாமல் அரைமணி நேரம் கொட்டித் தீர்த்துவிட்டது. அவனோடு பைக்கில் புறப்பட்டு சூளைமேட்டில் நுழைந்தால், தரையில் துளி ஈரங்கூடக் கிடையாது. சுளீரென்று வெயில்வேறு. சரவணபவன் பின்னால் கோவிலுக்கருகே இருந்த பாபா இடத்தில் இறங்கினோம். வாசு வாசலிலேயே இருந்த பூக்காரரிடம் பூ வாங்கிக்கொள்ள, நான் அருகிலிருந்த டீக்கடையில் பிஸ்கெட் பாக்கெட் வாங்கிக் கொண்டேன். பாபாவின் அறையில் ஒரு தம்பதியர் அவரை சேவித்துக் கொண்டிருந்ததால் வெளியே நடைபாதையில் இருவரும் அமர்ந்தோம். தம்பதியர் வெளியேறியதும்; பாபாவோடு இருந்தவர்கள் அவரை சத்தம்போட்டு சாப்பிட வைத்தனர். இரண்டே நிமிடத்தில் அவர் சாப்பிட்டு முடித்ததும், நாங்கள் உள்ளே சென்றோம். வாசு பூவை அவரது படத்திற்கு முன் போட்டுவிட்டு, சிலவற்றை (வேறொருவர்) கேட்டுக் கொண்டபடி அவரின் பாதங்களில் போட்டான். நான் பாதந்தொட்டு வணங்கி நின்றேன்.
அவர் கடுமையான மோனத்தில் தனக்குத் தானே பேசியபடி இருந்தார். நான் நின்று கொண்டிருந்தேன். பாபாவின் உதவியாளர் பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக் கொள்ளும்படி அவரிடம் சொன்னார். நான் பிஸ்கெட் பாக்கெட்டை அவரது கைகளில் கொடுத்தேன். அதை வாங்கியவர் தனது படத்தின் முன்வைத்தவர். திரும்ப எடுத்து எதிரே இருந்த மேஜையில் வைக்கும்படி தந்தார்.  உதவியாளர் நான்கு பிஸ்கெட்களை நீட்ட, அதைக் கையில் வாங்கி என்னிடம் கொடுத்தவர், திரும்பவும் வாங்கி உதவியாளரிடம் எனக்கு கொடுக்கச் சொன்னார். அவரும் கொடுத்தார். பிஸ்கெட்டை வாங்கி கையில் வைத்தபடி நின்றேன். வாசு அவர் எதிரே நின்றான். வேறொருவர் பிளாஸ்டிக் பையிலிருந்த ரூபாய் நோட்டுகளை நீட்ட, சும்மாயிரு பாபா அதட்டினார். நான் பாபா காலருகேயும், வாசு எனக்கு பின்னாலுமாக அமர்ந்தோம்.
பாபா தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவர் “இவனுக்கு இங்க என்ன வேலை.. உனக்கு இங்கே வேலை கிடையாது என்று சத்தமாகச் சொல்லிவிட்டு மீண்டும் தனக்குத் தானே பேசுவதில் லயித்துப்போனார். நான் கண்களை மூடியமர்ந்தேன். நிமிடங்கள் செல்லச் செல்ல உடம்பெல்லாம் எனர்ஜி பரவியது. முதுகுத் தண்டில் சிலிர்ப்பு. உடம்பு அனலாகி காது வழியே மூச்சுக்காற்று வெளியேறிய மாதிரி இருந்தது. உடம்பு லேசானது. இருகைப்பிடிக்குள்ளிருந்த பிஸ்கெட்கள் லேசாகி பறந்தும், திரும்ப கைக்கு வந்ததும் போல இருந்தது. இறந்து போன பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா புதையல் எடுக்கப்போய் கைகால் விளங்காமல் போன மெக்கானிக் சித்தப்பா எல்லோரும் எனக்குள் வந்து போனார்கள்.
    நேரம் ஆக, ஆக எதுவுமில்லை.
    எந்த எண்ணமுமில்லை.
    நான் காலியாகியிருந்தேன்.
    இப்போது பாபாவின் முணகல்கள் மட்டுமே
    காதில் விழுந்தது. இதுதான் அனுபூதியா?
    சார் கிளம்புங்க சார், ஆட்கள் வந்திருக்கிறாங்க
    என்று உதவியாளர் சொன்னதும். சட்டென எழ முயற்சித்தேன். முடியவில்லை. கால்கள் மரத்துப் போயிருந்தன. பாபாவின் சாய்வுநாற்காலியில் கைவைத்து கிந்தி, கிந்தி நடந்து சுவரில் கைவைத்து கால்களை உதறி சுதாரித்தேன். வாசுவும் எழுந்து விட்டான்.
மீண்டும் அவரது பாதம் தொட்டு வணங்கிவிட்டு வெளியேறினேன். உடம்பும் மனசும் நிகழ் உலகுக்கு வரமுடியாத பரவசம் மிகுந்திருந்தது. உடம்பும் மனசும் கழுவிவிட்ட மாதிரி லேசாக இருந்தது. எப்.சி. செய்த கார்போலப்பட்டது.
இருவரும் பைக்கில் கிளம்பினோம். ஒரு டீக்கடையில் நிறுத்தி டீயோடு சிகரெட் பற்ற வைத்தோம். அவர் எதையோ ட்ரான்ஸ்பார்ம் பண்ணநினைக்கிறார். அதான் இது என்றான் வாசு.
அப்படியே அசையாம 5,10 நிமிசம் உட்கார்ந்துட்டோமோ என்றேன். “5 நிமிசமா ஒரு மணி நேரத்துக்கு மேலாச்சு. அவரும் விடறமாதிரியில்ல.. என்றான் வாசு.
இதே அனுபூதி தினம் 5 நிமிசம் கிடைத்தால் போதும். எப்பவும் மரணத்தை எதிர் கொள்ளலாம் என்றுபட்டது எனக்கு.
இது எத்தனையாவது பிறந்தநாள் என்று சொல்லவில்லையே.... 55!

அருவி குறித்து....

மணல் வீடு கவிதை




அவன் இப்போது எழுதுவது

எத்தனையாவது கவிதை

தெரியாது



மனிதன் செய்வதற்கு எத்தனையோ இருக்க



யாரும் சீந்துவாரற்ற

கவிதை எழுதுவதை ஏன்

தேர்ந்தெடுத்தான்



கவிதை என்பதோடு

அவனும் அப்படியே

என்று பட்டிருக்கவேண்டும்



ஆள

சம்பாதிக்க

பேர் வாங்க

படைதிரட்ட

போர் புரிய



இப்படி எத்தனை

எத்தனையோ உண்டும் தான்

இதற்கும் ஆயிரமாயிரம்

பேர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்



குழந்தைகள் நதிக்கரையில்

மணல் வீடுகட்டி கலைத்துப் போவதுபோல்



அவன் போக்கில்

இருக்கட்டும்

கவிதையும்

அவனும்



அருவி குறித்து....



எப்போதோ

அவளும் தலை நனைத்திருக்கலாம்

இவனும்

தேடிவந்து இங்கு தலை நனைப்பான்

என்றறியாமல்



கொலையானவனையும்

கொலையாளியையும்

ஒரே போல

குளிர்வித்தே அனுப்புகிறாள்

அருவித்தாய்

...................

ஒரு பைத்தியம்

ஒரு கவிஞன்

ஒரு குழந்தை



மூவருக்கும்

அருவி சிலிர்ப்புதான்

ஆனந்தம் தான்



கட்டற்றவர்கள்

மீது

கட்டற்றவர்கள்

காதல் கொள்வது

இயற்கை தானே (வா)

இயல்பு தானே (வா) அண்ணாச்சி?

........................



மூலிகைகளின்

வேர் தழுவி

பெரு மரங்களின்

கால் பரவி

பெருமலை பாறைகள்

பள்ளங்களில்

இடறி விழுந்து

சறுகி

பெருகி

பொங்கி

பேரிரைச்சலோடு

தாயற்ற பிள்ளை

ஒருவனின்

தலைதடவித் தழுவி

ஆசிர்வதிக்கும்

தண்ணீர்க்கேது விலக்கு?



வித்யாஷங்கர்

அருவி குறித்து....

மணல் வீடு கவிதை




அவன் இப்போது எழுதுவது

எத்தனையாவது கவிதை

தெரியாது



மனிதன் செய்வதற்கு எத்தனையோ இருக்க



யாரும் சீந்துவாரற்ற

கவிதை எழுதுவதை ஏன்

தேர்ந்தெடுத்தான்



கவிதை என்பதோடு

அவனும் அப்படியே

என்று பட்டிருக்கவேண்டும்



ஆள

சம்பாதிக்க

பேர் வாங்க

படைதிரட்ட

போர் புரிய



இப்படி எத்தனை

எத்தனையோ உண்டும் தான்

இதற்கும் ஆயிரமாயிரம்

பேர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்



குழந்தைகள் நதிக்கரையில்

மணல் வீடுகட்டி கலைத்துப் போவதுபோல்



அவன் போக்கில்

இருக்கட்டும்

கவிதையும்

அவனும்



அருவி குறித்து....



எப்போதோ

அவளும் தலை நனைத்திருக்கலாம்

இவனும்

தேடிவந்து இங்கு தலை நனைப்பான்

என்றறியாமல்



கொலையானவனையும்

கொலையாளியையும்

ஒரே போல

குளிர்வித்தே அனுப்புகிறாள்

அருவித்தாய்

...................

ஒரு பைத்தியம்

ஒரு கவிஞன்

ஒரு குழந்தை



மூவருக்கும்

அருவி சிலிர்ப்புதான்

ஆனந்தம் தான்



கட்டற்றவர்கள்

மீது

கட்டற்றவர்கள்

காதல் கொள்வது

இயற்கை தானே (வா)

இயல்பு தானே (வா) அண்ணாச்சி?

........................



மூலிகைகளின்

வேர் தழுவி

பெரு மரங்களின்

கால் பரவி

பெருமலை பாறைகள்

பள்ளங்களில்

இடறி விழுந்து

சறுகி

பெருகி

பொங்கி

பேரிரைச்சலோடு

தாயற்ற பிள்ளை

ஒருவனின்

தலைதடவித் தழுவி

ஆசிர்வதிக்கும்

தண்ணீர்க்கேது விலக்கு?



வித்யாஷங்கர்

அருவி குறித்து....

மணல் வீடு கவிதை




அவன் இப்போது எழுதுவது

எத்தனையாவது கவிதை

தெரியாது



மனிதன் செய்வதற்கு எத்தனையோ இருக்க



யாரும் சீந்துவாரற்ற

கவிதை எழுதுவதை ஏன்

தேர்ந்தெடுத்தான்



கவிதை என்பதோடு

அவனும் அப்படியே

என்று பட்டிருக்கவேண்டும்



ஆள

சம்பாதிக்க

பேர் வாங்க

படைதிரட்ட

போர் புரிய



இப்படி எத்தனை

எத்தனையோ உண்டும் தான்

இதற்கும் ஆயிரமாயிரம்

பேர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்



குழந்தைகள் நதிக்கரையில்

மணல் வீடுகட்டி கலைத்துப் போவதுபோல்



அவன் போக்கில்

இருக்கட்டும்

கவிதையும்

அவனும்



அருவி குறித்து....



எப்போதோ

அவளும் தலை நனைத்திருக்கலாம்

இவனும்

தேடிவந்து இங்கு தலை நனைப்பான்

என்றறியாமல்



கொலையானவனையும்

கொலையாளியையும்

ஒரே போல

குளிர்வித்தே அனுப்புகிறாள்

அருவித்தாய்

...................

ஒரு பைத்தியம்

ஒரு கவிஞன்

ஒரு குழந்தை



மூவருக்கும்

அருவி சிலிர்ப்புதான்

ஆனந்தம் தான்



கட்டற்றவர்கள்

மீது

கட்டற்றவர்கள்

காதல் கொள்வது

இயற்கை தானே (வா)

இயல்பு தானே (வா) அண்ணாச்சி?

........................



மூலிகைகளின்

வேர் தழுவி

பெரு மரங்களின்

கால் பரவி

பெருமலை பாறைகள்

பள்ளங்களில்

இடறி விழுந்து

சறுகி

பெருகி

பொங்கி

பேரிரைச்சலோடு

தாயற்ற பிள்ளை

ஒருவனின்

தலைதடவித் தழுவி

ஆசிர்வதிக்கும்

தண்ணீர்க்கேது விலக்கு?



வித்யாஷங்கர்

அருவி குறித்து....

மணல் வீடு கவிதை




அவன் இப்போது எழுதுவது

எத்தனையாவது கவிதை

தெரியாது



மனிதன் செய்வதற்கு எத்தனையோ இருக்க



யாரும் சீந்துவாரற்ற

கவிதை எழுதுவதை ஏன்

தேர்ந்தெடுத்தான்



கவிதை என்பதோடு

அவனும் அப்படியே

என்று பட்டிருக்கவேண்டும்



ஆள

சம்பாதிக்க

பேர் வாங்க

படைதிரட்ட

போர் புரிய



இப்படி எத்தனை

எத்தனையோ உண்டும் தான்

இதற்கும் ஆயிரமாயிரம்

பேர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்



குழந்தைகள் நதிக்கரையில்

மணல் வீடுகட்டி கலைத்துப் போவதுபோல்



அவன் போக்கில்

இருக்கட்டும்

கவிதையும்

அவனும்



அருவி குறித்து....



எப்போதோ

அவளும் தலை நனைத்திருக்கலாம்

இவனும்

தேடிவந்து இங்கு தலை நனைப்பான்

என்றறியாமல்



கொலையானவனையும்

கொலையாளியையும்

ஒரே போல

குளிர்வித்தே அனுப்புகிறாள்

அருவித்தாய்

...................

ஒரு பைத்தியம்

ஒரு கவிஞன்

ஒரு குழந்தை



மூவருக்கும்

அருவி சிலிர்ப்புதான்

ஆனந்தம் தான்



கட்டற்றவர்கள்

மீது

கட்டற்றவர்கள்

காதல் கொள்வது

இயற்கை தானே (வா)

இயல்பு தானே (வா) அண்ணாச்சி?

........................



மூலிகைகளின்

வேர் தழுவி

பெரு மரங்களின்

கால் பரவி

பெருமலை பாறைகள்

பள்ளங்களில்

இடறி விழுந்து

சறுகி

பெருகி

பொங்கி

பேரிரைச்சலோடு

தாயற்ற பிள்ளை

ஒருவனின்

தலைதடவித் தழுவி

ஆசிர்வதிக்கும்

தண்ணீர்க்கேது விலக்கு?



வித்யாஷங்கர்

Friday, October 1, 2010

பிப்லி லைவ்வும் போப்ஸ் டாய்லெட்டும்

பிப்லி லைவ் அமீர்கான் தயாரிப்பில் இந்தியில் தயாரிக்கப்பட்டு வெளிவந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் படம்.
இந்திய விவசாயியின் மனசாட்சியாக இருந்து இந்தப்படத்தை தயாரித்துள்ள
அமீர்கானுக்கு முதலில் சல்யூட்!
படம் பார்க்கும் போது  மீடியாக்காரர்களின் முகத்தில் விவசாயி ஒருவர் காரித்துப்பிய எச்சில் தான் தெரிகிறது.
விவசாயத்தை ஆதரமாகக் கொண்ட பிப்லி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள்.
அவர்கள் வாங்கிய கடனுக்காக நிலத்தை விற்று தரும்படி வங்கி கேட்கிறது.
உள்ளுர் பணக்காரரும் அரசியல் புள்ளியுமானவரிடம் இருவரும் போய் உதவி கேட்கிறார்கள்.
விவசாயி தற்கொலை செய்துகொண்டால் அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் தருகிறது. உங்களில் யாராவது ஒருவர் தற்கொலை செய்து விட்டு, பணத்தை வைத்து நிலத்தை தாய்பாற்றிக் கொள்ளலாம் என்று யோசனை சொல்கிறார்.
அண்ணன் தம்பி இருவரும் ஆலோசிக்கிறார்கள் தம்பி தற்கொலை செய்து கொள்வதென்றும் அதில் வரும் பணத்தை வைத்து அண்ணன் குடும்பத்தையும் விவசாயத்தையும் பார்த்துக் கொள்வதென்று முடிவு செய்கிறார்கள். இதை இருவரும் ஒரு டீக்கடையில் வைத்து தெரிவிக்கவும் செய்கிறார்கள்.
இதைக் கேள்விப்படும் அந்தப் பகுதியில் அச்சகத்தில் பணியாற்றும் நிருபர் தனது பத்திரிகையில் இதை வெளியிடுகிறார்.
இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் செய்தி மிக முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் தற்கொலை செய்து கொள்ளப்போகும் விவசாயி நாதா வை லைவ்வாக காட்ட முடிவு செய்து அப்லிங்க் வேனோடு கிராமத்திற்கு போகிறது.
நாதாவின் பேட்டி டி.வி.யில் வந்ததும் முதலமைச்சர் கோபமாகி கலெக்டரிடம் பேசுகிறார்.
கலெக்டர் நாதாவின் சீட்டிற்கு போய் சாஸ்திரி திட்டம் என்று ஒரு அடிபம்பை தந்துவிட்டு செல்கிறார்.
வேறொரு சாதிக்கட்சி தலைவர் வந்து நாதவை சந்தித்து அவனை சாகவிடமாட்டோம் என்று சூளுரைக்க அதுவும் டி.வி.யில் வருகிறது.
மேலும் டென்ஷன் அதிகரிக்கிறது. இதற்குள் நாதாவின் வீட்டைச் சுற்றிலும் ஏராளமான காமிராக்கள், வீடியோ காமிராக்கள் ஆப்லிங்க் வேன்கள், போலீஸ் பாதுகாப்பு என்று அந்த ஊரை அமளிப்படுகிறது.
தொடர்ந்து நாதாவைப்பற்றி ஊராரின் பேட்டிகள் நாதா சொன்னபடி செத்துருவான் என்று உறுதி செய்கிறது.
முதல்வருக்கு எதிராக சதி செய்யும் ளஅதே கட்சியைச் சேர்ந்த நாதாவை சந்தித்து 2 நாளில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றால்  சொன்று விடுவதாக மிரட்டிவிட்டு வேறு மாதிரி டி.வி.க்களுக்கு பேட்டி கொடுத்து விட்டு போகிறார்.
இரவும் பகலும் டி.வி.க்காரர்கள் நாதாவை கண்காணித்தபடி இருக்கிறார்கள்.
அவனது தற்கொலை அப்படியே லைவ்வாக காட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.
நாதாவை குடும்பத்தோடு, ஆட்டுக்குட்டியோடு என்று விதம் விதமாக ஒவ்வொரு டி.வி.யும் போட்டி போட்டு காட்டுகின்றன.
முதலமைச்சரே நாதாவின் கிராமத்திற்கு வந்து ஒரு லட்ச ரூபாய் தரப்படும் என்று வாக்குறுதி அளித்து சாதித் தலைவரோடு வந்து செல்கிறார்.
கிராமம் திருவிழா கோலம் கொள்கிறது.
எப்போதும் கார், ஜீப் பறந்து கொண்டேயிருக்கிறது.
டி.வி.காம்பயர்கள் முகத்துக்கு மேக்கப் போட்டு லிப்ஸ்டிக் பூசி தினமும் காலையில் நாதாவை குறித்து செய்திகளை லைவ்வாக தந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருநாள் அதிகாலையில் காலைக்கடன் கழிக்க நாதா ஊருக்கு ஒதுக்குப்புறம் ஒதுங்க அதையும் ஒருவர் டவரிலிருந்து காமிராவில் சுருட்டிவிடுகிறார்.
அதற்குப்பிறகு நாதாவை காணவில்லை.
நாதா மலம் கழித்ததைக் கூட தொலைக்காட்சிகள் காட்டி அவன் எங்கே என்று கேள்வி எழுப்புகின்றன.
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு வீட்டில் நாதா சிலரால் கடத்து வைக்கப்பட்டிருப்பது உள்ளுர் நிருபருக்கு தெரியவருகிறது.
அவர் தொலைக்காட்சி நிருபருக்கு போன் செய்து தெரிவிக்க அந்த வீடு நள்ளிரவில் தொலைக்காட்சி நிருபர்களால் முற்றுகையிடப்படுகிறது.
அப்போது ஏதோ வெடிக்க தீ விபத்தில் நாதா இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
நாதா பேரில் ஏழை விவசாயிகளுக்கு உதவி கார்டு திட்டத்தை முதல்வர் அறிவிக்கிறார்.
நாதாவின் அண்ணன் பணத்திற்காக அலைய விபத்தில் இறந்தவருக்கு பணம் தரமுடியாது தற்கொலைக்குத் தான் 1 லட்சம் என்று அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.
அடுத்தடுத்து வரிசையாக மீடியா கார்கள் ஏமாற்றத்தோடு ஊரைவிட்டு கிளம்புகின்றன.
நகரின் உயர்ந்த கட்டிடங்கள் நாற்கரச் சாலைப் பணி நடைபெறுகிறது. விவசாயத்தை கைவிட்ட பலர் மண்வெட்டிக்கொண்டுஉள்ளனர். அவர்களுக்கிடையே நாதாவும் இருக்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு நகர்புறத்தில் வேலைக்கு குடியிருப்பதாக எழுத்தில் காட்டப்படுகிறது.
நையாண்டியாக மீடியா குறித்து கதை பேசினாலும் போகிற போக்கில் இப்போதுள்ள அரசியலமைப்பை, அதிகாரவர்க்கத்தை மீடியாக்களின் சொரணையற்ற தன்மையை விவசாயிகளின் நலிவை சுட்டிக் காட்டத்தவறவில்லை.
இப்படியொரு படத்தை முதல்வர் குடும்பத்து வாரிசுகள் காலநிதி, உதயநிதி, தயாநிதி யாராவது தயாரிக்க முன்வருவார்களா? மாட்டார்கள் (இது மல்லாக்கப்படுத்துக் கொண்டு வானத்தை பார்த்து கொண்டு எச்சில் துப்பும் விஷயமாகிவிடும்)
அதேசமயம் பிரேசில் படமான போப்ஸ் டாய்லெட் இதைபார்க்கும் போது நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இன்னமும் கிராமமென்றால் பச்சைதாவணி மாமன் மகனும், அருவாளோட திரியும் இளந்தாரியும் அவிங்கா வீம்பு பண்றாங்கே பெருசு சொல்லிருச் என்று வசனங்களால் கிராமத்தை காட்டாமல்
விளைநிலங்கள் அடுக்குமாடி வீடுகளாகவும், கல்லூரி கட்டிடங்களாகவும் மாறிவருவதை புதிய தலைமுறை சினிமாக்காரர்கள் திரைக்கு கொண்டு வர வேண்டும்.
கவிஞர் தேவதச்சன் சொன்னது போல கிராமங்கள் மேலும் மேலும் நோய்வாய்ப் பட்டுக்கொண்டிருக்க நகரங்கள் டானிக் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன.
இதை என் இளைய தலைமுறை எடுத்துச் சொல்ல பிளிப்லைவ் போப்ஸ் டாய்லெட் போன்ற படங்களை பார்க்கவேண்டுமென பரிந்துரைக்கிறேன்.
போப்பின் வருகையையொட்டி தொலைக்காட்சிகளும், மற்ற மீடியாக்களும் அந்த ஊரில் உள்ளவர்களின் பேட்டியை தொடர்ந்து வெளியிட்டுவரும்.
இந்தநிலையில் பக்கத்து நகரிலிருந்து சிறுசிறுபொருட்களை கடத்து வரும் நண்பர்கள் போப் வருகையை வைத்து சம்பாதிக்க திட்டமிடுவார்கள்.
மீடியாக்கள் லட்சம்பேர் கூடக்கூடும் என்று திரும்பத்திரும்ப சொல்லும்.
இதை நம்பி ஒருவர் ஆயிரக்கணக்கான விதவிதமான கேக்குகள் தயாரிப்பிலும் இன்னொருவர் பீட்சா தயாரிப்பிலும் ஈடுபடுவார்கள்.
கதாநாயகன் வேறுமாதிரி யோசிப்பான். இவ்வளவு பேர் கூடுமிடத்தில் ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்தால் இதற்காக அவன் படும்பாடுதான் கதை. ரேடியோ ஜாக்கியாக மாற விரும்பும் மகளின் டிரான்சிஸ்டருக்கு பேட்டரி கூட வாங்கித்தராமல் பைசா பைசாவாக சேர்த்து கட்டண கழிப்பிடத்தை கட்டிவிடுவான். போப் வருகையன்று அவன் கழிப்பிட கோப்பையை ஏந்திவரும் போது போப் சிலநிமிடங்கள் மட்டுமே இருந்து விட்டு புறப்பட்டுவிடுவார்.
அவன் பைத்தியம் பிடித்தவன்போல் டி.வி.மீது பீர் பாட்டிலை எறிவான் இப்படி முடியும் கதை.
இதில் மகளின் ஆசை, இவனது கனவு, மனைவியின் பாடுகள் எல்லாமே நிராசையாவது பெருத்த சோகம்.
பிப்ளி லைவ் படத்தில் விவசாய குடும்பத்தின் உறவு நெருக்கங்கள் நிலத்தின் மீதான ஈடுபாடு எவையும் கண்டுகொள்ளப்படாதது வருத்தத்திற்குரியதே.
ஆனாலும் படத்தின் முதல் காட்சியிலிருந்து கிணறு வெட்டும் ஒ
ருவன் (பசி பட்டினியோடு) தண்ணீரை பார்க்காமலே மடிந்து போவது தனிக்கதை. (கி.ரா.வின் கிணறு கதைதான் நினைவுக்குவந்தது)
இதில் கதாநாயகனோடு அவளதுகுடும்பத்தாரும் அவனது ஆசையோடு பயணித்து நிராசையில் தத்தளிப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. திரைக்கதையில் பிப்ளி லைவ்வில் அது மிஸ்ஸிங்.
இருப்பினும் சமகால பிரச்சணையை விமர்சனக் கண்ணோட்டத்தோடு முன் வைத்த அமீர்கானுக்கு நாம் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
                                                                                             வித்யாஷங்கர்.