Saturday, April 14, 2012

kavithai

நகம் கடித்தல்
கால் ஆட்டுதல்
தலை சொரிதல்
பல்லிடுக்கை துலாவுதல்
இப்படி யார் யாரோ
எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்கள்
எதையாவதுசெய்யாமல்
எவராலும் இருக்க முடிவதில்லை
சும்மா இருக்கும்
சுகமறிந்தவர்
என்ன செய்வார்
சும்மா இருப்பார்
------------வித்யா ஷங்கர்