Wednesday, May 9, 2012

3


மூன்றாவது நபரின் வருகை
நம் முகங்களில்
பூசி விடுகிறது
ஒப்பனையை
நாம் விரும்பாமலே
வித்யாஷங்கர்

3 comments:

  1. என்னைக் கொலை செய்வதற்கான
    16 காரணங்கள்
    1.கவிதை எழுதுகிறேன்
    2.குடிக்கிறேன் ங்சமூக ஒவ்வாமை சி
    3.யாரையாவது எப்போதும்
    காதலிக்கிறேன் ங்சரோஜாதேவி முதல் அனுஷ்கா வரை
    /காதலிகள் காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறார்கள் சி
    4.எந்த அரசியல் கட்சியிலும் இல்லை
    5.எந்த அரசுப்பதவியிலும் இல்லை
    6.எதையும் அடையவேண்டும் என்ற முயற்சி இல்லை
    7.கடவுளை குறித்து தெளிவு இல்லை
    8.எந்த ஒன்று குறித்தும் எனது கருத்தை
    வெளியிட முடியவில்லை
    9நான் யாரை /எதை எதிர்ப்பது என்று தெரியவில்லை
    10.சொந்த வீடில்லை
    11,குடும்பத்தாருக்கு கடன் தவிர்த்து
    எதையும் சேர்த்து வைக்கவில்லை
    12.பிராணி எதையும் வளர்க்கவில்லை
    ங்புலி வளர்க்கவேண்டும் என்பது நெடு நாள் ஆசை

    13.சிறிதும் பெரிதுமாக சிறிய வீட்டில் எங்கும்
    புத்தகம் வைத்து இருப்பதாக புகார் இருக்கிறது
    14.எப்போதும் எதையாவது படித்துகொண்டிருக்கிறேன்
    15.எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை
    இன்ன பிற காரனங்களும்
    இருக்கலாம்தானே உங்களுக்கு ...!
    வித்யாஷங்கர்

    ReplyDelete
  2. 16.பிழைப்பு எழுத்து கூலி

    ReplyDelete