Saturday, July 31, 2010

கொலை = கவிதை (திருத்தியமைக்கப்பட்டுள்ளது)

ஒரு நல்ல கவிதை
எழுதுவதும்
ஒரு கொலை செய்வதும்
ஒரே மாதிரித்தான்

திட்டமிடல்
ஓர்மை
தேர்ந்தெடுத்தல்
தொடர் வன்மம்
தீராத ரணம்
இரண்டுக்கும் பொது

அலட்சியங்கள்
அவமதிப்புகள்
புறக்கணிப்பு
பொல்லாப்பு
சேதாரமாகும் பொழுதுகள்
முனைப்பை
தீவிரப்படுத்துகின்றன

கொலைக்கான
கருவிகளை
சூழலே
தந்து உதவுகின்றன

எங்கேஎப்படி
இரக்கமற்று
உயிர் பறிப்பது

எதுவும்கவிஞனின்
திட்டமிடலில் இல்லை

அடையாளத்தை
விட்டுச் செல்வதா
அடையாளத்தை
அழித்துச் செல்வதா

தருணங்களே
தீர்மானிக்கின்றன
கவிதையிலும்
கொலையிலும்

எதிராளி
கொல்லப்பட்டதும்
பெறுகிற
விடுதலை வேட்கையோடு
கவிதையின்
வரிவடிவமும்
நிறைவடைகிறது.

தலைமறைவானால்
எல்லோரும் தேடுவார்கள்
வாய்க்கு வாய் பேசும்

நல்ல கவிதையை
முன்வைத்து
நேரும் உறவு போல

கொலையில்
சிந்திய ரத்தமும்
சேதமும் சிதைவும்
வெளித் தெரியும்
கவிதையில் தெரியாது

ஆனாலும்
கொலை செய்வதைவிட
சிரமமும் கடினமுமானது
ஆகச் சிறந்த கவிதையை
எழுதுவது
 வித்யாஷங்கர்

No comments:

Post a Comment