Tuesday, April 13, 2010

சொத்து சேர்த்த பலருக்கும்
ஆசையிருக்கிறது
பதவி பெற்றுவிட...
படித்தவர் அனைவருக்கும்
ஆசையிருக்கிறது
உயர் பதவிபெற...

எல்லோருக்கும்
எல்லாம் கிடைப்பதில்லை...

அவரவரும்,
அவரவர்
இயலாமையோடுதான்
கழிக்கிறார்கள்...

எவரவர்க்கு
எதுதருமென்று
யாரோ தீர்மானிப்பவர்களாக
இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்...
                                      - வித்யா ஷங்கர்.
 

No comments:

Post a Comment