Thursday, June 4, 2009

பழஞ்செருப்புகள்

காலணிகள் காணாமல் போவது
யாரையும் ஒரு கணம்
நிலை குலையச்செய்து விடுகிறது

வனவாசம் புறப்பட்ட ராமனின்
பாதுகையை வேண்டி வாங்கியதும்
கல்லிலும் முள்ளிலும் நடக்க விட்டதும்
பாதுகாபபிஷேகம் செய்ததும்
பரதன் கால அரசியல்

புஷ் முதல் சிதம்பரம் வரை
செருப்பு வீச்சில் தப்பியது
இனஒழிப்பு ஆதங்க
அரசியல் வெளிப்பாடு

கல்யாண வீடுகலில்
காலணி களவு போவதும்
கவலையோடு ஒருவர்
வெறுங்காலில் நடப்பதும்
அரசியல் தூண்டிய
காலாகால அவஸ்தைகள்

காலணிதான் என்றாலும்
கனவு போனபின்
கனவிலும் வந்து
தூக்கம் கெடுக்கிறது
பழஞ்செருப்புகள்
-வித்யாஷங்கர்

No comments:

Post a Comment