Thursday, April 1, 2010

கொளுத்துகிற
வெயிலில் டீ குடித்தபடி
சத்தமாய் பேசுகிற
மதுரை மனிதர்களை
அருகிலிருந்து மௌனமாய்
வேடிக்கை பார்க்கிறார்கள்
வெளிநாட்டவர்கள்

லூஸ் பேண்டும்
கலர், கலர் பனியனுமணிந்த
சிறுமுலை
வெள்ளைக்காரி
கீரைக்காரியின்
பெருதனம்கண்டு
வியந்து
புகைப்படம் எடுக்கிறாள்

சடைபோல
பன்னிய சிகையில்
மல்லிகைச் சரம் தொங்க
பெருந்தொடை
துவாரபாலகரை
படம்பிடிக்கிறாள்
மற்றொரு வெள்ளைக்காரி

துவார பாலகர்
வீதிவலம் வருவது போல்
பறர்மலைக்கள்ளர்கள்
தெருவலம் வருகிறார்கள்

அண்ணன்கிட்ட கேட்டேன்
அண்ணன்கிட்டே வாங்கிக்கோன்னு
அண்ணன் சொல்லுச்சு
வித்தியாஷங்கர்

No comments:

Post a Comment