Saturday, July 3, 2010

நீ தேடும்
புரதான காவியம்
ஏதும்
என்னிடமில்லை

அன்றாட
அலுப்பும்
சலிப்பும்
உனக்கு
மேலும் சோர்வூட்டக் கூடும்

ஏதேனும்
ஒரு மதுக்கடைவாசலில்
என்னை பார்க்கநேர்ந்தால்
கோபிக்காதே
மன்னித்துவிடு
மது வருந்திய
தனிமையில்
விவாதித்தது
உன்னோடுதான்
என்பதை
எடுத்துச்சொல்லத்தெரியாத
அப்பாவி
அடியேன்

No comments:

Post a Comment