Wednesday, August 18, 2010

konjam kavithaigal

இப்படியாக்கும்
அப்படியாக்கும்
விமர்சனங்கள்
எளிது
எப்படியாபட்டவர்களுக்கும்
தப்படி நேர்வது
தப்பாமல் நடக்கிறது
---------------------------------

இது மூதாதையர்
எறிந்த கல்

கல்லால் தீ மூட்டி கல்லிடுக்கில்
பானை வைத்து
கறிசமைத்து
சாப்பிட்ட கல்

அமரக்கல்
படுக்கக்கல்
கையில்கல்
கல் கடவுளானது
எப்போதும்
ஆயுதங்களே
காப்பவை
கல் கடவுளானது இப்படித்தான்
----------------------------------------------
உங்களிடமும்
இருக்கலாம்
அவரிடமும்
இவரிடமும் கூட இருக்கலாம்

எவரிடமும்
இல்லாத தொன்று

எல்லா உயிரும்
தனித் தனிதானே!

இப்படி செய்திருக்கலாம்
என்பது
செய்து முடித்தபின்பே
தெரிகிறது

முன்னும்
பின்னும்
முரணாகிக் கிடக்கிறது

No comments:

Post a Comment