Thursday, January 19, 2012

நன்மைகோணங்கிக்கு போன் செய்தேன்
நகுலன் பேசினார் 
நகுலன் இருக்கிறாரா என்றேன் 
இல்லை என்றார் 

நெல்லையில் 
கல்யாண்ஜியும் 
விக்ரமாதித்யனும் 
பேசி முடித்து 
விச்ராந்தியாய் அமர்ந்திருந்தனர் 

முருகபூபதியும் 
கோணங்கியும் 
குருமலை போய்
மூலிகை தேடி போயிருப்பதாகவும் 
தேவதச்சன்  சொன்னார் 
கூடவே அந்த மூலிகை கிடைப்பது 
அவ்வளவு   எளிதில்லை 
மௌனி அதை உண்டதாகவும் 
தெரிவித்தார் 

எங்களது  பேச்சை 
ஜன்னல் வழியே 
சமயவேல்  பார்த்து கொண்டிருப்பதாக 
கலாப்ரியா சொல்லிவிட்டு 
வித்யாஷங்கர்  என்று அழைத்திருக்கிறார் 
என் காதில் விழாமல் போயிற்று 
அருவி  இரைச்சலில்....
===========வித்யாஷங்கர் 

1 comment:

  1. கோணங்கிக்கு போன் செய்தேன்
    நகுலன் பேசினார்
    நகுலன் இருக்கிறாரா என்றேன்
    இல்லை என்றார்

    நெல்லையில்
    கல்யாண்ஜியும்
    விக்ரமாதித்யனும்
    பேசி முடித்து
    விச்ராந்தியாய் அமர்ந்திருந்தனர்

    முருகபூபதியும்
    கோணங்கியும்
    குருமலை போய்
    மூலிகை தேடி போயிருப்பதாகவும்
    தேவதச்சன் சொன்னார்
    கூடவே அந்த மூலிகை கிடைப்பது
    அவ்வளவு எளிதில்லை
    மௌனி அதை உண்டதாகவும்
    தெரிவித்தார்

    எங்களது பேச்சை
    ஜன்னல் வழியே
    சமயவேல் பார்த்து கொண்டிருப்பதாக
    கலாப்ரியா சொல்லிவிட்டு
    வித்யாஷங்கர் என்று அழைத்திருக்கிறார்
    என் காதில் விழாமல் போயிற்று
    அருவி இரைச்சலில்....
    ===========வித்யாஷங்கர்

    ReplyDelete