Thursday, December 16, 2010

வார்த்தைகள்

எனது வார்த்தைகள்

சுவாசம் போல தன்னியல்பாய் உள்உருவாகி

வெளிவருகின்றன



எதை எப்படி என்

சொல்வதென்ற தீர்மானத்தை மீறி

நடைபோடுகின்றன



யார் யார் வார்த்தைகளோ

மனதில் விழுந்து

உருமாறி

தனக்கென உருவெடுத்து

தாளகதியமைத்து

நடனமிடுகின்றன



மேடைக்கு சொந்தமில்லா

கால்கள்

விட்டுச் செல்லும்

எஞ்சிய இசையையும்

தாளலயத்தையும்



பார்வையற்ற

பார்வையாளன் ரசிக்க

No comments:

Post a Comment