Friday, December 17, 2010

இது கவிதையல்ல

மழைக்கு

குடை

வெயிலுக்கு

குடை

மற்றநாளில்

குடைக்கு?



.......



தொலைக்காட்சி

பெண் வர்ணனையாளரை

நிர்வாணப்படுத்தி

சுட்டது

இலங்கைராணுவம்

ஏன்

நிர்வாணப்படுத்தி....

பாவம்

இசைப்பிரியா

உன்மகள் போல

தங்கை போல

படவில்லையா?

அவளின்

கடைசி முணகல்

தமிழ்

இந்தக் காட்சியை

கனிமொழி பார்த்திருப்பாரா?

ஜெகத் கஸ்பர்? திருமாவளவன்?



.......



சீமானுக்கும்

ராசாவுக்கும்

ஒரே வயசு இருக்கும்

கோடிகளை

குவித்ததால்

ராசா உறவு

சீமான் எதிரி



.......



வாலி

வைரமுத்து

பா.விஜய்

இவங்களுக்கெல்லாம்

இலங்கைன்னு ஒரு நாட்ல

தமிழர்கள் இருந்தாங்கன்னு

தெரியுமா?

யார் சாகடிச்சது தெரியுமா?



கொலைகாரனை விட

கொடியவன்

அதை பார்த்தும்

வாய் பொத்தி இருப்பவன்



பாரதி சொன்னான்

படிச்சவன்

பாவம் செய்தால்

ஜயோன்னு போவான்



இவர்களிடம்

தயாராக

இருக்கிறதாம்

அவருக்கான

அஞ்சலிக் கவிதை



.......



இறுதித் தமிழன் இருக்கும் வரைக்கும்

இருக்கும் உன் பெயரும்

ஆயுத எழுத்தாய்

(இது யாருக்கு

பொருந்தும்)



.......



புத்தக வெளியீடுகளும்

விசிலடிக்கும்

ரசிகர்களும்

வேறொரு காமெடி



.......



பயமாயிருக்கிறது

நொண்டி நாயென்று

பின்னொருநாள்

திட்டுவாங்கப் போகிறவரை

நினைத்தால்



வித்யாஷங்கர்



.......

No comments:

Post a Comment