Thursday, December 16, 2010

விசாரணை

சைக்கிளில்

விளக்கு எரியவிடாமல்

போனவனை

போலீஸ் மடக்கி விசாரித்து

பீடி வாங்கிக் கொண்டு

விட்டது



கஞ்சா கடத்தியவனை

மிரட்டி

காசு வாங்கிச் சென்றது



மாமூல் ரவுடியை

மடக்கி

மாமூல் பெற்றது



கோடி கோடியாய்

ஊழல் செய்தவனை

கும்பிட்டு நின்றது



சிரித்துக் கொண்டே

புகைப்படக்காரர்களோடு

போலீசோடு

போஸ் கொடுக்கிறார்கள்

கோடிக் கொளையர்கள்

No comments:

Post a Comment