Friday, September 10, 2010

காணாமல் போவது...

இன் டூ தி வைல்டு என்ற ஆங்கிலப்படம். நேற்றும் நேற்று முன் தினமும் இயக்குநர் ராஜேஸ்வரோடு பார்க்க வாய்த்தது. படம் என்னை உலுக்கிவிட்டது உலுக்கி இன் டூ தி வைல்டு என்பதை காட்டாறு அல்லது வனப்ரஸ்தம் என்று கொள்ளலாம்.


ரோச் என்ற இளைஞன் படித்து நல்லமார்க்குகளோடு பட்டம் பெறுகிறான். பட்டமளிப்பு விழாவிற்கு பின் விருந்தில் அவனது தந்தை அவனுக்கு புதிய மாடல் கார் ஒன்றை பரிசளிக்க முன்வருகிறார். அவன் அதை ஏற்க மறுக்கிறான். உயர் கல்விக்காக 24 ஆயிரம் டாலர் பணத்தை தந்து அனுப்புகிறார்.

அவனோ இதை எல்லாம் புறக்கணித்து தன்னைத் தேடிப் போவதாகச் சொல்லி அலஸ்கா புறப்படுகிறான் (நமது இமயமலை போன்ற பணிமலைப் பிரதேசம்) முதல்காரியமாக கையிலுள்ள சான்றிதழ்கள் டாலர்கள் எல்லாவற்றையும் கீழே போட்டு தீயிட்டு கொளுத்துகிறான்.

போகும் வழியில் ஒரு தம்பதிகளை சந்திக்கிறான். அவர்களோடு சில நாட்களை கழித்து விட்டு பயணத்தை தொடர்கிறான்.

வேறொரு பகுதியில் ஒரு இளம் பாடகியைச் சந்திக்கிறான். அவன் இவள் மீது காதல் கொள்கிறாள். இவனோ அவனை விலக்கி, பயணத்தை தொடர்கிறான் திருட்டுத்தனமாக ரயில் பயணம் மேற்கொண்டு பிடிபட்டு, கீழிறங்கி விடப்படுகிறான்.

வழியில் வேறொரு முதியவர் பிரிந்து போன தனது மகன், மனைவிக்காக காத்திருக்கிறார் அவரோடு சில நாட்கள் கழிக்கிறான்.

அலாஸ்கா பற்றி மேப், அங்கு கிடைக்கும் மிருகங்களை வேட்டை ஆடுவது எப்படி? எவ்வளவு நேரத்தில் அவற்றை சமைத்து சாப்பிட வேண்டும். அங்கு இயற்கையாக கிடைக்கும் கிழங்கு, கனிகளில் எவற்றை உண்ணலாம் என்ற புத்தகம், துப்பாக்கி குண்டுகளோடு அலாஸ்காவுக்கு ஒரு தோள் சுமையோடு ட்ரக் ஒன்றில் போய் சேருவான். (படம் இங்குதான் துவங்குகிறது. மற்றதெல்லாம் இடையிடையே தான் அவன் எழுதுவது காட்சிகளாக இடத்திற்கு வருகிறது) அடையாளமாக பனிப்பகுதியில் உள்ள ஒரு மரக்கிளையில் தன் தொப்பியை சுற்றி விட்டு பனிமலை நோக்கி நடக்கிறான்.

நதியொன்றை நடந்து கடந்து பனிமலையை அடைகிறான். எங்கும் பனிமலை. நடக்க, நடக்க வேறு எதுவுமே தென்படவில்லை. பரவசத்தில், யாருமில்லை சிகரெட் இல்லை, வாகனச் சத்தமில்லை என்று வாய்விட்டு கத்துகிறான்.

ஒரு பள்ளத்தாக்கில் எப்போதோ விழுந்த மினிவேன் ஒன்று பனிமூடிக்கிடப்பது தெரிய அதையடைந்து பெரும் அரும்பாடுபட்டு அதை தனது இருப்பிடமாக மாற்றிச் கொள்கிறான்.

தனது பெரை அலக்ஸ்ட்ரைம் மரக்கட்டையில் பொறித்து விட்டு தனது அனுபவங்களை எழுதுகிறான். மிளா ஒன்றை சுட்டு சாப்பிடுகிறான். பனி உருகி வழிய சைலன்ரை மரத்தில் கட்டிவிட்டு ஷவர் போல குளிக்கிறான்.

இப்படியே எழுதுவதும், வேட்டையாடி சாப்பிடுவதுமாக சில மாதங்கள் கழிகிறது. எதையோ உண்ணக் கூடாததை உண்டதால் வயிறு கோளாறாகி படுத்த படுக்கையாகி மெலிந்து கிடக்கிறான்.

திரும்ப போவதற்காக நெடுந்தூரம் நடந்து திரும்பி தன் தொப்பியை வைத்த நதியருகே வந்து சேர்கிறான். அவன் நிதியிலறங்க வேகங் கொண்டு சுழல் இழுக்கிறது உடல் பலவீனமாக இருப்பதால் நீந்த முடியாமல் திரும்ப பஸ்சுக்கே திரும்புகிறான்.

உடல் முழுக்க மூடிப்படுக்கிறான். உயிர் கொஞ்சம் கொஞ்சமாகபிரிய, காரின் ஒட்டை வழியாக உயரே பார்க்க ஆகாயம் விரிகிறது.

அப்போது கடைசி வரிகள் எழுதிவிட்டு கண்ணில் நீர்வழிய கண் மூடுகிறான்.

அவன் எழுதி வைத்த அட்டையில் பகிர்ந்து கொள்வதே சந்தோஷம் என்று படம் முடிகிறது. பகிர்ந்து கொண்டேன் சந்தோஷம்.

No comments:

Post a Comment