Saturday, December 25, 2010

நேற்றைப் போல் இன்று....

நாளை என் இருப்பால்

நலமொன்றுமில்லை

நாட்டுக்கோ ஊருக்கோ

வீட்டுக்கோ



இன்றைக்கும் அப்படித்தான்



இருந்தாலும்

அன்றன்றைய பாடுகளை

அவரவரே பட்டு தீர்வது தானே

சரி.



இப்படித்தான் கழிந்தது

நேற்றும் இன்றும்



நாளைக்கான கனவுகளை

இழந்தவனிடம்

நாளைக்கான பணத்தை

இழந்தவனிடம்

நாளைக்கான அன்பை

இழந்தவனிடம்



இன்றைக்கானது என்று

சொல்லிக் கொள்ள

எதுவுமில்லை

நேற்றைப் போல்



வித்யாஷங்கர்

4 comments:

  1. எல்லாவற்றையும் இழந்தவனின் துயரம் ஒப்பிடமுடியாதது.

    நாளைக்கான அன்பையும் இழந்ததை விடவும் ஒரு தூக்குதண்டனை பெரிதாக இருக்குமோ?

    வலிக்கிறது வித்யாஷங்கர்.

    ReplyDelete
  2. இந்தக் கவிதையை என் தளத்தில் இட்டுக் கொள்ள அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எடுத்துச் செல்கிறேன்.

    ReplyDelete
  3. "நாளைக்கான அன்பை
    இழந்தவனிடம்
    இன்றைக்கானது என்று
    சொல்லிக் கொள்ள
    எதுவுமில்லை"


    அருமை..

    ReplyDelete
  4. thanku sundarji...gowripriya. idont know how can ireply to u personnaly. if know guide me

    ReplyDelete