Monday, October 25, 2010

ரஞ்சன் பராக்!

சர்வதேச நிறுவனமான ஜகான் நிறுவனமான ஜகான் நிறுவனம் திரைப்படத்துறையில் கால் பதிக்க உள்ளதாக டைரக்டர் கே.ராஜேஸ்வர் நேற்று சென்னையில் தெரிவித்தார்.


பல்வேறு மொழிகளிலும் கால் பதிக்கவுள்ள இந்த நிறுவனம் அமரன், இதயத்தாமரை, கோவில்பட்டி வீரலட்சுமி போன்ற படங்களை இயக்கிய கே.ராஜேஸ்வரை வைத்து திடீர் நகரில் ஒரு காதல் கானா என்ற திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக ஜகான் நிறுவனர் ராஜ்மோகன்பிள்ளை தெரிவித்தார்.

இந்தியில் வசூலில் சக்கைபோடு போட்ட அரப் பிரேம்சி கஜப் கஹானி யின் கதையை எழுதியவர் ராஜேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வெற்றிக் கதையை டைரக்டர் கே.ராஜேஸ்வர் தனது மகன் ரஞ்சனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ஜகான் நிறுவன தயாரிப்பாக தமிழில் தர உள்ளார்.

நவம்பர் 12ல் சென்னையில் நடைபெறவுள்ள பட பூஜை விழாவில் பாரதிராஜா, பாலுமகேந்திரா, வைரமுத்து உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் முன்னிலையில் ரஞ்சன் ஹீரோவாக முறையாக அறிமுகப்படுத்துவார் என்று டைரக்டர் கே.ராஜேஸ்வர் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள் வேண்டுகொளுக்கிணங்க ரஞ்சன் அழைக்கப்பட்டு அரங்கில் தோன்றினார்.

தமிழுக்கு இன்னொரு புது நல்வரவு என்று ரஞ்சனை பார்த்த மாத்திரத்திலேயே பலரும் பாராட்டியது வியக்கவைத்தது.

No comments:

Post a Comment